'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
ஆந்திர மாநிலத்தில் நடந்த தேர்தலில் சந்திர பாபு நாயுடு, பவன் கல்யாண், ஆகியோர் இணைந்து அரசை நடத்தி வருகிறார்கள். சந்திர பாபு நாயுடு முதல்வராகவும், பவன் கல்யாண் துணை முதல்வராகவும் உள்ளார்கள். இந்நிலையில் ஆந்திர அரசில் உள்ள சில நியமனப் பதவிகளுக்கு யார், யாரை நியமிக்கலாம் என்ற ஆலோசனை நடந்து முடிந்துவிட்டதாம்.
பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியினருக்கு அதில் 20 சதவீதப் பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல். ஆந்திரா திரைப்பட மற்றும் டிவி வளர்ச்சிக் கழகத்தின் தலைவராக பவன் கல்யாணின் அண்ணனும், சிரஞ்சீவியின் தம்பியுமான நாக பாபு நியமிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது. திரைப்படத் தயாரிப்பாளராகவும், நடிகராகவும் இருக்கிறார் நாக பாபு. திரைப்படத் துறையினருடன் நாகபாபுவுக்கு நெருங்கிய தொடர்பு உள்ளதால் தெலுங்குத் திரையுலகத்தை ஆந்திராவுக்கும் கொண்டு வர முயற்சிப்பார் என்பதால் அந்தப் பதவியை வழங்கலாம் என பவன் ஆலோசனை சொன்னாராம்.
முதலில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சேர்மன் பதவியைப் பெற நாகபாபு விருப்பமாக உள்ளார் என்றும் செய்திகள் வெளிவந்தன. நாகபாபுவுக்கு ராஜ்ய சபா எம்.பி பதவியைப் பெற்றுத் தர வேண்டும் என்பதுதான் பவனின் முதல் விருப்பமாக இருந்ததாம். ஆனால், அதற்கான காலம் இன்னும் அதிகமாக உள்ளது. அதுவரையில் திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் தலைவராக இருக்கட்டும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.