மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் |
ஆந்திர மாநிலத்தில் நடந்த தேர்தலில் சந்திர பாபு நாயுடு, பவன் கல்யாண், ஆகியோர் இணைந்து அரசை நடத்தி வருகிறார்கள். சந்திர பாபு நாயுடு முதல்வராகவும், பவன் கல்யாண் துணை முதல்வராகவும் உள்ளார்கள். இந்நிலையில் ஆந்திர அரசில் உள்ள சில நியமனப் பதவிகளுக்கு யார், யாரை நியமிக்கலாம் என்ற ஆலோசனை நடந்து முடிந்துவிட்டதாம்.
பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியினருக்கு அதில் 20 சதவீதப் பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல். ஆந்திரா திரைப்பட மற்றும் டிவி வளர்ச்சிக் கழகத்தின் தலைவராக பவன் கல்யாணின் அண்ணனும், சிரஞ்சீவியின் தம்பியுமான நாக பாபு நியமிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது. திரைப்படத் தயாரிப்பாளராகவும், நடிகராகவும் இருக்கிறார் நாக பாபு. திரைப்படத் துறையினருடன் நாகபாபுவுக்கு நெருங்கிய தொடர்பு உள்ளதால் தெலுங்குத் திரையுலகத்தை ஆந்திராவுக்கும் கொண்டு வர முயற்சிப்பார் என்பதால் அந்தப் பதவியை வழங்கலாம் என பவன் ஆலோசனை சொன்னாராம்.
முதலில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சேர்மன் பதவியைப் பெற நாகபாபு விருப்பமாக உள்ளார் என்றும் செய்திகள் வெளிவந்தன. நாகபாபுவுக்கு ராஜ்ய சபா எம்.பி பதவியைப் பெற்றுத் தர வேண்டும் என்பதுதான் பவனின் முதல் விருப்பமாக இருந்ததாம். ஆனால், அதற்கான காலம் இன்னும் அதிகமாக உள்ளது. அதுவரையில் திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் தலைவராக இருக்கட்டும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.