ரசிகர் மன்றம் எதற்கு... ஊரார் பிள்ளையை கெடுக்க விரும்பவில்லை : அரவிந்த்சாமி பளீச் | ரீல் அல்ல ரியல் : விபத்து ஏற்படுத்திய லாரியை சேஸிங் செய்து மடக்கிய நவ்யா நாயர் | விஜய் தவறான ரூட்டில் செல்கிறார் - மோகன்.ஜி வருத்தம் | ரூ.70 கோடி பட்ஜெட் படத்தில் ஆர்யா | இறுதிகட்ட கங்குவா பணியில் இணைந்த சூர்யா | விடாமுயற்சி படத்தில் இன்னும் ஒரு பாடல் காட்சி மீதம் | 'எமர்ஜென்சி' விவகாரம் : கங்கனாவிற்கு நீதிமன்றம் நோட்டீஸ் | பிளாஷ்பேக்: முதல் ஆக்ஷன் ஹீரோயின் | ஹிட்லர் கருத்து சொல்ல மாட்டார்: விஜய் ஆண்டனி | புற்று நோயாளிகளுக்கு உதவ இசை நிகழ்ச்சி நடத்தும் பரத்வாஜ் |
கங்குவா படத்தை முடித்துவிட்ட சூர்யா தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் தனது 44 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்க, முக்கிய வேடங்களில் ஜெயராம், ஜோஜூ ஜார்ஜ், சுஜித் சங்கர், நாசர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டுடியோ கிரீன் இணைந்து தயாரித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு சீரான இடைவெளிகளில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ஊட்டியில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் படப்பிடிப்பில் சூர்யாவுக்கு தலையில் அடிபட்டு காயம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டு சூர்யா ஊட்டியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாகவும் சொல்லப்பட்டது. இந்தநிலையில் சூர்யாவின் நண்பரும் அவரது 2டி நிறுவன தயாரிப்பாளருமான ராஜசேகர் பாண்டியன் இதுகுறித்து சூர்யா ரசிகர்களை அமைதிப்படுத்தும் விதமாக, “அன்பான ரசிகர்களே. அது வெறும் சிறிய காயம் தான். அதனால் கவலைப்பட வேண்டாம். உங்களது அன்பாலும் பிரார்த்தனையாலும் சூர்யா அண்ணா தற்போது நன்றாக இருக்கிறார்” என்று ஒரு தகவலை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.