எம்.என். ராஜம், எஸ்.பி. முத்துராமனுக்கு கலைத்துறை வித்தகர் விருது: முதல்வர் வழங்கினார் | நடிகை பிரதியுஷா தற்கொலை வழக்கு : தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் | தயாரிப்பாளர் சங்க தேர்தலில் ஓட்டுக்கு பணம், ஏகப்பட்ட பரிசு பொருட்களா? | சரத்குமார், ராதிகா படங்கள் ஒரே நாளில் மோதல்: மார்ச் 27ல் ஜெயிப்பது யார்? | ஒரே நாள் மோதலில் 'டாக்சிக், துரந்தர் 2' | பிளாஷ்பேக்: தரமான வெற்றியைத் தந்த “மதுரை வீரனும்” தங்கவாள் நன்கொடை வழங்கிய மக்கள் திலகமும் | சேயோன் : 24 வருடங்களுக்குப் பிறகு இணையும் நண்பர்கள் | தியாகராஜன் குமாரராஜா, விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகும் 'பாக்கெட் நாவல்' | ஆன்மிகப் படங்களை நோக்கி நகரும் தமிழ், தெலுங்கு சினிமா | தெலுங்கில் சர்வானந்த் ஜோடியாக நடிக்கும் ருக்மணி வசந்த் |

நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் அவரது 12வது படம் தற்போது தயாராகி வருகிறது. ஒரு ஸ்பை திரில்லராக உருவாகும் இந்த படத்தில் விஜய் தேவரகொண்டா முதன் முறையாக ஒரு போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜெர்சி படத்தை இயக்கிய இயக்குனர் கவுதம் தின்னனூரி இயக்குகிறார். கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக விஜய் தேவரகொண்டா உள்ளிட்ட படக்குழுவினர் இலங்கை சென்றனர். இலங்கையில் இறங்கி தான் தங்க வேண்டிய ஹோட்டலுக்குச் சென்ற விஜய் தேவரகொண்டாவுக்கு அங்கு இலங்கையின் பாரம்பரிய கண்டியன் இசைக்குழுவினரின் நடனத்துடன் கூடிய சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. இலங்கையில் கிட்டத்தட்ட மூன்று முதல் நான்கு வாரங்கள் வரை படப்பிடிப்பு நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.




