ரஜினி, கமல் இணையும் படத்தை இயக்குகிறேனா? : பிரதீப் ரங்கநாதன் சொன்ன பதில் | அஜித் 64வது படத்தில் இயக்குனர் சரண் பணியாற்றுகிறாரா? | காந்தாரா சாப்டர் 1 கிளைமாக்ஸ் சவால்களை வெளியிட்ட ரிஷப் ஷெட்டி | பிரியங்கா மோகனின் ‛மேட் இன் கொரியா' | பாலாஜி மோகன், அர்ஜுன் தாஸ் இணையும் ‛லவ்' | சூரியை கதாநாயகனாக வைத்து படம் இயக்கும் சுசீந்திரன் | கோர்ட் ஸ்டேட் vs நோ படி படத்தின் தமிழ் ரீமேக் புதிய அப்டேட் | 2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? |
கன்னட திரை உலகில் மிக முக்கிய நடிகர்களில் ஒருவர் சேலஞ்சிங் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகர் தர்ஷன். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இவர் கன்னட பத்திரிக்கையாளர் ஒருவரை தரக்குறைவாக பேசியதாக ஒரு ஆடியோ வெளியானது. அதைத் தொடர்ந்து எழுந்த எதிர்ப்பால் கன்னட மீடியாக்கள் இவர் மீது இரண்டு வருட தடை விதித்தன.
அதன்படி மீடியாக்களில் தர்ஷன் பற்றிய எந்த செய்திகளையும் வெளியிடாமல் மீடியாக்கள் புறக்கணித்தன. இந்த நிலையில் தற்போது முக்கியமான கன்னட மீடியாக்களின் எடிட்டர்களுடன் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் தர்ஷன் மீதான தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. இருதரப்பிற்குமான சுமூகமான பேச்சுவார்த்தை ஏற்பாட்டை பிரபல கன்னட தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் முன்னின்று செய்திருந்தார்.
இதனை தொடர்ந்து பேசிய நடிகர் தர்ஷன், “இந்த வரலட்சுமி நோன்பு நாளில் இப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டது சந்தோஷம் அளிக்கிறது. நான் எனது செயலுக்கு எப்போதுமே வருத்தமோ மன்னிப்போ கேட்க தயங்கியது இல்லை. இப்போதும் கன்னட மீடியாக்களிடம் எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். எனது திரையுலக வாழ்க்கை இந்த அளவிற்கு உயர்ந்ததற்கு அவர்களுக்கும் மிகப்பெரிய பங்கு இருக்கிறது” என்று கூறியுள்ளார்.