தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

கடந்த வருடத்திற்கான கேரளா அரசின் 53வது திரைப்பட விருதுகள் குறித்த அறிவிப்பு நேற்று வெளியானது. இதில் சிறந்த நடிகருக்கான விருது மம்முட்டிக்கும் சிறந்த நடிகருக்கான ஸ்பெஷல் ஜூரி விருது நடிகர் குஞ்சாக்கோ போபனுக்கும் கிடைத்துள்ளது. சிறந்த இயக்குனருக்கான விருது 'அறியிப்பு' என்கிற படத்தை இயக்கியதற்காக இயக்குனர் மகேஷ் நாராயணனுக்கு கிடைத்துள்ளது.
இதில் என்ன ஆச்சரியம் என்றால் இவர் கடந்த 2021ல் பகத் பாசிலை வைத்து இயக்கிய ‛சி யூ சூன்' என்கிற படத்திற்கும் 2022ல் வெளியான நாயாட்டு என்கிற படத்திற்கும் சிறந்த படத்தொகுப்பாளருக்கான கேரளா அரசின் விருதை தொடர்ந்து பெற்று வந்துள்ளார். அந்த வகையில் இந்த வருடம் கிடைத்த விருதின் மூலம் ஹாட்ரிக் சாதனையை நிகழ்த்தியுள்ளார் மகேஷ் நாராயணன்.
இவர் இயக்குனர் ஆவதற்கு முன்பு கமல் நடித்த விஸ்வரூபம் உள்ளிட்ட படங்களுக்கு படத்தொகுப்பாளராக பணியாற்றியவர். அதைத் தொடர்ந்து மலையாளத்தில் டேக் ஆப், வைரஸ், மாலிக் உள்ளிட்ட சில படங்களை இயக்கியுள்ளார். இந்த விருது கிடைத்தது பற்றி மகேஷ் நாராயணன் கூறும்போது, “எனது படத்திற்கு ஏதோ ஒரு விருது கிடைக்கும் என்று நினைத்தேன். ஆனால் சிறந்த இயக்குனருக்கான விருது கிடைக்கும் என நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை” என்று கூறியுள்ளார்.