இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
மகேஷ்பாபு நடிப்பில் திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் தயாராகி வரும் படம் குண்டூர் காரம். இந்த படம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து மகேஷ்பாபுவின் குடும்பத்தில் நிகழ்ந்த அடுத்தடுத்த சோக நிகழ்வுகளால் படப்பிடிப்பு தள்ளிக்கொண்டே போனது. இடையில் படப்பிடிப்பு துவங்கி கடந்த மாதம் இந்த படத்திற்கு ‛குண்டூர் காரம்' என்கிற டைட்டிலும் வைக்கப்பட்டது. ஆனாலும் டைட்டில் ஏற்படுத்திய பரபரப்பை விட மீண்டும் இந்த படத்தில் இருந்து பல சர்ச்சையான விஷயங்கள் தொடர்ந்து மீடியாவில் இடம் பிடித்து வருகின்றன. இந்த படத்தின் கதாநாயகியாக ஒப்பந்தமாகி இருந்த நடிகை பூஜா ஹெக்டே, இந்த படத்தின் படப்பிடிப்பு ஷெட்யூல் அடிக்கடி மாற்றப்பட்டதால் மற்ற படங்களில் நடிப்பதற்கு சிக்கல் ஏற்படுவதாக கூறி சமீபத்தில் இந்த படத்தில் இருந்து விலகினார்.
இசையமைப்பாளர் தமன் கூட இந்த படத்தில் இருந்து விலகி விட்டார் என்று சொல்லப்பட்டது. ஆனால் அந்த செய்தியில் உண்மை இல்லை என தமன் சமீபத்தில் மறுத்திருந்தார். இந்த நிலையில் இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வரும் பி.எஸ் வினோத், சில காரணங்களால் தற்போது வெளியேறிவிட்டார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது.
இத்தனைக்கும் கடந்த ஐந்து வருடங்களாக திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸுடன் நட்பு கூட்டணியில் இருந்து வருபவர் தான் பி.எஸ் வினோத். அரவிந்த சமேத வீரராகவா மற்றும் ஆல வைகுண்டபுரம் லோ ஆகிய படங்களில் இருவரும் இணைந்து பணியாற்றியுள்ளனர். இந்த நிலையில் படப்பிடிப்பு தேதிகள் மட்டும் ஸ்கிரிப்டில் அடிக்கடி மாற்றம் செய்யப்படுவதாலேயே ஒளிப்பதிவாளர் பிஎஸ் வினோத் வெளியேறி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.