‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
கேரள மாநில அரசு ஆண்டுதோறும் சிறந்த திரைப்பட கலைஞர்களை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது. அந்த வரிசையில் 53வது கேரள மாநில திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் சிறந்த நடிகராக மம்முட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஏற்கெனவே 7 மாநில விருதுகளை பெற்றுள்ள மம்முட்டிக்கு இது 8வது விருதாகும். சிறந்த படமாக அவர் நடித்த 'நண்பகல் நேரத்து மயக்கம்' படம் தேர்வாகியுள்ளது. இந்த படத்தை லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கி இருந்தார், தமிழ் நடிகை ரம்யா பாண்டியன் நாயகியாக நடித்திருந்தார்.
மற்ற விருதுகள் பற்றிய விபரம் வருமாறு:
சிறந்த நடிகை: வின்சி அலோஷியஸ் (ரேகா)
சிறந்த இயக்குநர்: மகேஷ் நாராயணன் (அறியிப்பு)
சிறந்த குணச்சித்திர நடிகர்: பி பி குஞ்சிகிருஷ்ணன் (நா தான் கேஸ் கொடு)
சிறந்த குணச்சித்திர நடிகை: தேவி வர்மா (சவுதி வெள்ளக்கா)
ஸ்பெஷல் ஜூரி விருது: (நடிப்பு) குஞ்சாக்கோ போபன் (நா தான் கேஸ் கொடு) மற்றும் அலென்சியர் லே லோபஸ் (அப்பன்)
ஸ்பெஷல் ஜூரி விருது (இயக்கம்): - பிஸ்வஜித் எஸ் மற்றும் ரரீஷ்
பிரபலமான மற்றும் அழகியல் மதிப்பு கொண்ட சிறந்த திரைப்படம்: நா தான் கேஸ் கொடு
சிறந்த குழந்தைகள் திரைப்படம்: பல்லோட்டி 90'ஸ் கிட்ஸ்
சிறந்த கதை எழுத்தாளர்: கமல் கே.எம் (பதா)
சிறந்த திரைக்கதை (ஒரிஜினல்): ரதீஷ் பாலகிருஷ்ணன் பொடுவால் (நா தான் கேஸ் கொடு)
சிறந்த திரைக்கதை (தழுவல்): ராஜேஷ் பின்னடன் (ஒரு தெக்கன் தள்ளு கேஸ்)
சிறந்த இசையமைப்பாளர் (பாடல்கள்): எம் ஜெயச்சந்திரன் (பத்தொன்பதாம் நூற்றாண்டு)
சிறந்த பாடகர்: கபில் கபிலன் (பல்லோட்டி 90'ஸ் கிட்ஸ் திரைப்படத்தின் "கனவே" பாடலுக்காக)
சிறந்த பாடகி: மிருதுளா வாரியர் (பத்தொன்பதாம் திரைப்படத்தின் "மயில்பீலி இலக்குன்னு கண்ணா" பாடலுக்காக)
சிறந்த இசையமைப்பாளர் (பின்னணி இசை): டான் வின்சென்ட் (நா தான் கேஸ் கொடு)
சிறந்த படத்தொகுப்பாளர்: நிஷாத் யூசுப் (தல்லுமாலா)
சிறந்த ஒளிப்பதிவாளர்: மனேஷ் மாதவன் (எல வீழா பூஞ்சிரா) மற்றும் சந்துரு செல்வராஜ் (வழக்கு)