ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தெலுங்கு திரையுலகின் இளம் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா தெலுங்கு மட்டுமல்லாது தென்னிந்திய அளவிலும் மிகப்பெரிய ரசிகர் வட்டத்தை பெற்றவர். அந்த வகையில் அவரது தம்பி ஆனந்த் தேவரகொண்டாவும் கடந்த 2019ல் தொரசாணி என்கிற படத்தில் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். கிட்டத்தட்ட நான்கு படங்களில் நடித்தும் விட்டார். இந்த நிலையில் நேற்று ஆனந்த் தேவரகொண்டா நடித்துள்ள பேபி என்கிற திரைப்படம் வெளியானது. இந்த படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன.
அதற்கு முன்னதாக இந்த படத்தின் பிரீமியர் காட்சி திரையிடப்பட்ட போது நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த படத்தை பார்த்து ரசித்தனர். படம் முடிந்து வெளியே வந்ததும் தம்பி ஆனந்த் தேவரகொண்டா மற்றும் படத்தின் நாயகி வைஷ்ணவி இருவரையும் தோளோடு தோள் சேர்த்து இறுக்கி அணைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் விஜய் தேவரகொண்டா.
மேலும் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், படம் பார்த்துவிட்டு பல இடங்களில் தான் அழுததாகவும் கூறியுள்ளார். அதற்கு பிறகான சிரிப்பும் சந்தோஷமும் தான் இது என்று கூறியுள்ள விஜய் தேவரகொண்டா, தனது தம்பியும் படத்தின் நாயகி வைஷ்ணவியும் இந்த படத்திற்காக மிகப்பெரிய அளவில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்கள்.. மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளார்கள் என்றும் பாராட்டி உள்ளார்.