எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு | ஜூன் ஜூலையில் பள்ளிகள் வேண்டாம் ; மலையாள இயக்குனர்கள் அரசுக்கு கோரிக்கை | மோகன்லாலும் மம்முட்டியும் கண்டுகொள்ளவில்லை ; பன்னீர் புஷ்பங்கள் சாந்தி கிருஷ்ணா வருத்தம் | ‛ஜனநாயகன்' படத்தில் நரேன் நடிக்கும் வேடம் இதுதான் | ‛கிச்சா' என்கிற பெயர் தன்னுடன் ஒட்டிக்கொண்டது எப்படி ? சுதீப் புதிய தகவல் | 'தீ' ரஜினியை ரி-க்ரியேட் செய்துள்ளாரா லோகேஷ்? | லகான் கிராம மக்களுடன் அமர்ந்து ‛சிதாரே ஜமீன் பர்' படத்தை பார்த்த அமீர்கான் | பிளாஷ்பேக்: காட்சியும், கானமும் “நான் பாடும் பாடல்” | உழைக்கும் கரங்கள், உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், பீஸ்ட் - ஞாயிறு திரைப்படங்கள் |
நடிகர் மோகன்லால் சில நாட்களுக்கு முன்பு தான், மலையாளத்தில் லிஜோ ஜோஸ் பள்ளிசேரி டைரக்சனில் தான் நடித்து வந்த மலைக்கோட்டை வாலிபன் என்கிற படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்தார். இதை தொடர்ந்து அவர் தனது புதிய படங்களின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்கு முன்பாக சற்று ரிலாக்ஸ் செய்யும் விதமாக தனது குடும்பத்துடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.. சில நாட்களுக்கு முன்பு சிங்கப்பூர் சென்ற அவர் தற்போது லண்டனில் தங்கியுள்ளார்.
லண்டனில் கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் பெண்களுக்கான ஒற்றையர் அரை இறுதி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை மோகன்லால் நேரில் கண்டு களித்தார். மேலும் அங்கிருந்த தனது நண்பர்களுடன் தான் எடுத்துக்கொண்டு சில புகைப்படங்களையும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார் மோகன்லால்.