ரசிகர் மன்றம் எதற்கு... ஊரார் பிள்ளையை கெடுக்க விரும்பவில்லை : அரவிந்த்சாமி பளீச் | ரீல் அல்ல ரியல் : விபத்து ஏற்படுத்திய லாரியை சேஸிங் செய்து மடக்கிய நவ்யா நாயர் | விஜய் தவறான ரூட்டில் செல்கிறார் - மோகன்.ஜி வருத்தம் | ரூ.70 கோடி பட்ஜெட் படத்தில் ஆர்யா | இறுதிகட்ட கங்குவா பணியில் இணைந்த சூர்யா | விடாமுயற்சி படத்தில் இன்னும் ஒரு பாடல் காட்சி மீதம் | 'எமர்ஜென்சி' விவகாரம் : கங்கனாவிற்கு நீதிமன்றம் நோட்டீஸ் | பிளாஷ்பேக்: முதல் ஆக்ஷன் ஹீரோயின் | ஹிட்லர் கருத்து சொல்ல மாட்டார்: விஜய் ஆண்டனி | புற்று நோயாளிகளுக்கு உதவ இசை நிகழ்ச்சி நடத்தும் பரத்வாஜ் |
நடிகர் மோகன்லால் சில நாட்களுக்கு முன்பு தான், மலையாளத்தில் லிஜோ ஜோஸ் பள்ளிசேரி டைரக்சனில் தான் நடித்து வந்த மலைக்கோட்டை வாலிபன் என்கிற படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்தார். இதை தொடர்ந்து அவர் தனது புதிய படங்களின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்கு முன்பாக சற்று ரிலாக்ஸ் செய்யும் விதமாக தனது குடும்பத்துடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.. சில நாட்களுக்கு முன்பு சிங்கப்பூர் சென்ற அவர் தற்போது லண்டனில் தங்கியுள்ளார்.
லண்டனில் கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் பெண்களுக்கான ஒற்றையர் அரை இறுதி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை மோகன்லால் நேரில் கண்டு களித்தார். மேலும் அங்கிருந்த தனது நண்பர்களுடன் தான் எடுத்துக்கொண்டு சில புகைப்படங்களையும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார் மோகன்லால்.