காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி | 'வேள்பாரி' வேலைகளில் தீவிரம் காட்டும் ஷங்கர் | பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாகபந்தம்' டீசர் |

சமீபத்தில் மலையாளத்தில் வெளியான 2018 திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. உலகெங்கிலும் சேர்த்து இதுவரை 150 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. தென்னிந்திய மொழிகளிலும் இந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. தெலுங்கில் வரவேற்பை பெற்ற இந்த படத்தின் வெற்றி சந்திப்பு சமீபத்தில் நடந்தது. இந்த நிகழ்வில் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளரான அல்லு அரவிந்த் கலந்து கொண்டார். அந்த விழாவில் திடீரென சம்மந்தமே இல்லாமல் 'கார்த்திகேயா 2' படத்தின் இயக்குனர் சந்து மொண்டேத்தி பற்றி புகழ்ந்து பேச ஆரம்பித்தார்.
“விஸ்வாசம் என்றால் இவரைப்போல இருக்க வேண்டும். கார்த்திகேயா 2 படத்திற்கு முன்னதாகவே அந்தப்படம் முடிந்ததும் இன்னொரு படம் எனக்கு பண்ணித் தாருங்கள் என்று கேட்டிருந்தேன். அந்தப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற பின்னால் அவருக்கு மிகப்பெரிய இடத்திலிருந்து எல்லாம் வாய்ப்புகள் தேடி வந்தன. ஆனால் எனக்கு கொடுத்த வாக்குறுதி காரணமாக அவற்றை மறுத்துவிட்டு என்னுடன் இணைந்து மீண்டும் படம் இயக்கத் தயாராக இருக்கிறார். ஆனால் ஒரு சிலரோ நம்மிடம் படம் இயக்கிவரும் போது ஒரு மாதிரியாகவும் படம் வெற்றிபெற்ற பிறகு அந்த விஸ்வாசம் மறைந்து பணம் மட்டுமே பிரதானமாக இருக்கின்றனர்” என்று கூறினார்.
சோசியல் மீடியாவில் இவரது பேச்சு வெளியானதை தொடர்ந்து இவர் பிரபல தெலுங்கு இயக்குனர் பரசுராமை குறிவைத்து தான் இப்படி பேசி உள்ளார் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அது உண்மையும் கூட. ஏனென்றால் கீதா கோவிந்தம் படத்தின் வெற்றிக்கு பிறகு பரசுராம் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் ஒரு படம் தயாரிக்க ஏற்கனவே திட்டமிட்டு அதற்கான முன்தொகையும் கொடுத்து இருந்தார் அல்லு அரவிந்த். ஆனால் சமீபத்தில் அதே கூட்டணியை தயாரிப்பாளர் தில் ராஜூ தன் பக்கம் இழுத்து விட்டார். இந்த கோபத்தில் தான் 2018 பட விழாவில் பரசுராம மீதான தனது கோபத்தை மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளார் அல்லு அரவிந்த்.




