நூறுசாமி படப்பிடிப்பு நிறைவு : மே 1ல் ரிலீஸ் | என்னாலேயே என்னை புரிந்து கொள்ள முடியவில்லை : தமன்னா | கல்யாணியைப் போல அமலாபாலுக்கும் கை கொடுக்குமா டிராகுலா ஜானர் படம்? | ரங்தே பசந்தி 20ம் வருட நிறைவு : படக்குழுவினருடன் சேர்ந்து கொண்டாடிய அமீர்கான் | கார் விபத்தில் இளைஞர்கள் காயம் : நிற்காமல் சென்ற மலையாள நடிகர் கைதாகி ஜாமீனில் விடுதலை | ஜப்பானில் ரிலீஸாகும் ‛குபேரா' | அனிமேஷனில் தயாராகும் ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் | ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள லக்கி பட டிரைலர் வெளியானது | கலைத்துறை வித்தகர் விருது : எம்.என் ராஜம் அரசுக்கு கோரிக்கை | சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு: விசாரணைக்கு ஆஜராக ஜெயராமுக்கு சம்மன் |

ஆர்ஆர்ஆர் படத்திற்கு பின் நடிகர் ராம் சரண் தற்போது ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. சமீபத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டார் ராம் சரண். அந்த நிகழ்வில் அவரது தந்தை மற்றும் நடிகர் சிரஞ்சீவி உழைப்பு குறித்து பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், "என் தந்தைக்கு 68 வயது ஆகிறது. இப்போது கூட அவர் நான்கு படத்தில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். தற்போது அதிக சம்பளம் பெறும் நடிகர்களில் அவரும் ஒருவர். தினமும் காலை 5.30 மணிக்கு ஒர்க் அவுட் செய்து அதன் பிறகு தான் அவர் படப்பிடிப்புக்கு செல்வார். இந்த வயதிலும் அவர் இவ்வளவு உற்சாகமாக இருப்பது எனக்கு இன்னும் கடுமையாக உழைக்க மிகப் பெரிய ஊக்கம் தருகிறது " என்று தெரிவித்துள்ளார்.




