20 வயது நடிகருடன் காதலா... : கீர்த்தி சுரேஷ் பதில் | 'இந்தியன் 3' படத்திற்காக மீண்டும் படப்பிடிப்பு | அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்? | 'தி கோட்' - தன் வேலையை ஆரம்பித்த மந்திரவாதி | 25 கோடியுடன் முடிவுக்கு வரும் 'சர்பிரா'!!! | விஷாலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் போட்ட கடிவாளம் | தங்கலான் படத்திற்கு யு/ஏ சான்று | பொறாமைக்கு மருந்தே கிடையாது : இயக்குனர் செல்வராகவன் | ஹீரோ ஆன மகன் விஜய் ஸ்ரீ ஹரி : வனிதா நெகிழ்ச்சி பதிவு | ரீமேக் மாதிரியே இருக்காது : ரசிகரின் கேள்விக்கு ரவி தேஜா பட இயக்குனர் பதில் |
ஆர்ஆர்ஆர் படத்திற்கு பின் நடிகர் ராம் சரண் தற்போது ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. சமீபத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டார் ராம் சரண். அந்த நிகழ்வில் அவரது தந்தை மற்றும் நடிகர் சிரஞ்சீவி உழைப்பு குறித்து பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், "என் தந்தைக்கு 68 வயது ஆகிறது. இப்போது கூட அவர் நான்கு படத்தில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். தற்போது அதிக சம்பளம் பெறும் நடிகர்களில் அவரும் ஒருவர். தினமும் காலை 5.30 மணிக்கு ஒர்க் அவுட் செய்து அதன் பிறகு தான் அவர் படப்பிடிப்புக்கு செல்வார். இந்த வயதிலும் அவர் இவ்வளவு உற்சாகமாக இருப்பது எனக்கு இன்னும் கடுமையாக உழைக்க மிகப் பெரிய ஊக்கம் தருகிறது " என்று தெரிவித்துள்ளார்.