நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
ஆர்ஆர்ஆர் படத்திற்கு பின் நடிகர் ராம் சரண் தற்போது ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. சமீபத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டார் ராம் சரண். அந்த நிகழ்வில் அவரது தந்தை மற்றும் நடிகர் சிரஞ்சீவி உழைப்பு குறித்து பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், "என் தந்தைக்கு 68 வயது ஆகிறது. இப்போது கூட அவர் நான்கு படத்தில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். தற்போது அதிக சம்பளம் பெறும் நடிகர்களில் அவரும் ஒருவர். தினமும் காலை 5.30 மணிக்கு ஒர்க் அவுட் செய்து அதன் பிறகு தான் அவர் படப்பிடிப்புக்கு செல்வார். இந்த வயதிலும் அவர் இவ்வளவு உற்சாகமாக இருப்பது எனக்கு இன்னும் கடுமையாக உழைக்க மிகப் பெரிய ஊக்கம் தருகிறது " என்று தெரிவித்துள்ளார்.