மம்முட்டி மோகன்லாலின் 'பேட்ரியாட்' டீசர் வெளியானது ; ரசிகர்களுக்கு ட்ரீட் உறுதி | திருமண நிச்சயதார்த்த தேதியை அறிவித்த அல்லு சிரிஷ் | ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே தூங்கும் அஜித்குமார்! | 'மன சங்கர வர பிரசாத் கரு' படத்தின் நயன்தாரா பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராம்சரண் ஒரு உண்மையான ஜென்டில்மேன் என்கிறார் ஜான்வி கபூர்! | இட்லிகடை படத்தின் முதல் நாள் வசூல்? 100 கோடியை அள்ளுமா? | விஜயை கைது செய்யணுமா? நடிகர் பார்த்திபன் பதில் இதுதான் | டிச.,5ல் ரிலீசாகும் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2: தாண்டவம்' | தென்தமிழகத்து இளைஞர்களின் கதை 'பைசன்': இயக்குனர் மாரி செல்வராஜ் | ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் |
தெலுங்குத் திரையுலகத்தில் 30 சதவீத ஊதிய உயர்வு கோரி, தெலுங்கு திரைப்படத் தொழிலாளர் கூட்டமைப்பு கடந்த இரண்டு வாரங்களாக ஸ்டிரைக் நடத்தி வருகிறது. இதனால், எந்தவிதமான தெலுங்கு திரைப்படப் படப்பிடிப்புகளும் நடைபெறவில்லை.
இது தொடர்பாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா அமைச்சர்களை தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சந்தித்துப் பேசினார். தொழிலாளர் கூட்டமைப்புடனும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், தாங்கள் கேட்கும் ஊதிய உயர்வில் எந்தவிதத்திலும் பின்வாங்க மாட்டோம் என தொழிலாளர் தரப்பில் உறுதியாக உள்ளார்களாம்.
இதனிடையே, ஸ்டிரைக்கை முடிவுக்குக் கொண்டு வர சீனியர் நடிகரான சிரஞ்சீவி முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது. நேற்று இரு தரப்பினரையும் அழைத்து அவர் தனித்தனியே பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். அது இன்றும் தொடர்கிறது. தயாரிப்பாளர்கள் அவர்களுக்கென தனியாக ஊழியர்களை நியமித்து படப்பிடிப்பைத் தொடர பேசி வருகிறார்களாம்.
இந்த ஸ்டிரைக் காரணமாக படங்களின் வெளியீடுகளும் தள்ளிப் போகும் சூழ்நிலை உருவாகி உள்ளது.