தெலுங்கு சினிமா ஸ்டிரைக்: பஞ்சாயத்தில் சிரஞ்சீவி | பிளாஷ்பேக் : 250வது படத்தில் சிவாஜிக்கு ஏவிஎம் செய்த மரியாதை | பிளாஷ்பேக் : தாஜ்மஹாலில் படப்பிடிப்பு நடந்த முதல் தமிழ் படம் | நடிகர் சங்கத்தில் இருந்து விலகியவர்கள் திரும்ப வேண்டும் : தலைவி ஸ்வேதா மேனன் வேண்டுகோள் | ஆணவ கொலை பின்னணியில் உருவாகும் 'நெல்லை பாய்ஸ்' | நெகட்டிவ் விமர்சனங்கள் கூலி வசூலை பாதிக்கிறதா? | பிளாஷ்பேக்: புதுப்புது அனுபவங்களோடு 'த்ரில்லர்' கதையாக வந்து, திகைப்பில் ஆழ்த்திய சிவாஜியின் “புதியபறவை” | மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குனரின் அடுத்த படம் | காதல் கொண்டேன் 2 வரும் : சோனியா அகர்வால் தகவல் | ஒரே வாரத்தில் 17 மில்லியன் பார்வைகளைப் பெற்ற 'மோனிகா' பாடல் |
தெலுங்குத் திரையுலகத்தில் 30 சதவீத ஊதிய உயர்வு கோரி, தெலுங்கு திரைப்படத் தொழிலாளர் கூட்டமைப்பு கடந்த இரண்டு வாரங்களாக ஸ்டிரைக் நடத்தி வருகிறது. இதனால், எந்தவிதமான தெலுங்கு திரைப்படப் படப்பிடிப்புகளும் நடைபெறவில்லை.
இது தொடர்பாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா அமைச்சர்களை தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சந்தித்துப் பேசினார். தொழிலாளர் கூட்டமைப்புடனும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், தாங்கள் கேட்கும் ஊதிய உயர்வில் எந்தவிதத்திலும் பின்வாங்க மாட்டோம் என தொழிலாளர் தரப்பில் உறுதியாக உள்ளார்களாம்.
இதனிடையே, ஸ்டிரைக்கை முடிவுக்குக் கொண்டு வர சீனியர் நடிகரான சிரஞ்சீவி முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது. நேற்று இரு தரப்பினரையும் அழைத்து அவர் தனித்தனியே பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். அது இன்றும் தொடர்கிறது. தயாரிப்பாளர்கள் அவர்களுக்கென தனியாக ஊழியர்களை நியமித்து படப்பிடிப்பைத் தொடர பேசி வருகிறார்களாம்.
இந்த ஸ்டிரைக் காரணமாக படங்களின் வெளியீடுகளும் தள்ளிப் போகும் சூழ்நிலை உருவாகி உள்ளது.