மம்முட்டி மோகன்லாலின் 'பேட்ரியாட்' டீசர் வெளியானது ; ரசிகர்களுக்கு ட்ரீட் உறுதி | திருமண நிச்சயதார்த்த தேதியை அறிவித்த அல்லு சிரிஷ் | ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே தூங்கும் அஜித்குமார்! | 'மன சங்கர வர பிரசாத் கரு' படத்தின் நயன்தாரா பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராம்சரண் ஒரு உண்மையான ஜென்டில்மேன் என்கிறார் ஜான்வி கபூர்! | இட்லிகடை படத்தின் முதல் நாள் வசூல்? 100 கோடியை அள்ளுமா? | விஜயை கைது செய்யணுமா? நடிகர் பார்த்திபன் பதில் இதுதான் | டிச.,5ல் ரிலீசாகும் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2: தாண்டவம்' | தென்தமிழகத்து இளைஞர்களின் கதை 'பைசன்': இயக்குனர் மாரி செல்வராஜ் | ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் |
1985ம் ஆண்டு சிவாஜி நடிப்பில் வெளிந்த படம் 'நாம் இருவர்'. இது சிவாஜியின் 250வது படம். தனது முதல் படத்தை தயாரித்த ஏவிஎம் நிறுவனமே தனது 250வது படத்தை தயாரிக்க வேண்டும். அப்போது வேகமாக வளர்ந்து கொண்டிருந்த தனது மகன் பிரபு தன்னோடு நடிக்க வேண்டும் என்கிற ஆசையோடு சிவாஜி அதற்கான கதையை பலரிடம் கேட்டு அது சரியாக அமையாததால் அப்போது கன்னடத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றிருந்த 'ராமபுரத ராவணனன்' என்ற படத்தின் உரிமத்தை வாங்கி அதையே தனது 250 படமாக நடித்தார்.
சிவாஜியின் வேண்டுகோளளை ஏற்று, ஏவிஎம் நிறுவனம் படத்தை தயாரித்ததோடு தங்களது புகழ்பெற்ற படமான 'நாம் இருவர்' படத்தின் தலைப்பையே சிவாஜியின் 250வது படத்திற்கும் வைத்தது.
ஊரில் சமூக விரோத செயல்களை செய்யும் வில்லன் கூட்டத்தை எதிர்த்து போராடும் ஒரு குடிகார ராணுவ சிப்பாயாக சிவாஜி நடித்தார். அவரை குடிபழக்கத்தில் இருந்து திருத்தி, அவருடன் சேர்ந்து வில்லன்களை சட்டத்தின் முன் நிறுத்தும் ஆசிரியராக பிரபு நடித்தார். சிவாஜியின் பேத்தியாகவும், பிரபுவின் காதலியாகவும் ஊர்வசி நடித்தார். சிவாஜியின் முன்னாள் காதலியாக சுஜாதா நடித்தார். படமும் பெரிய வெற்றி பெற்றது.