தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை | சிவகார்த்திகேயனின் 'சேயோன்' படப்பிடிப்பு நாளை துவக்கம் | பிளாஷ்பேக்: ஊதியத்தை உயர்த்திக் கேட்டு, உற்சாகமிகு நகைச்சுவையை வழங்கிய டி ஆர் ராமச்சந்திரனின் “சபாபதி” | அட்லி - பிரியா தம்பதியின் மகளுக்கு 'மியூ' பெயர் சூட்டல் | 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தை மிஸ் செய்தது ஏன்? ஜெய் விளக்கம் | அடுத்த ஜேம்ஸ்பாண்ட் யார்? | அமைச்சர் ராஜ்மோகனுக்கு ஏன் அந்த இலாகா? நடிகர் விஷால் கேள்வி | பஹத் பாசில் - பிரேம்குமார் இணையும் புதிய படம் துவக்கம் | விஜய்க்கு அவகாசம் தரணும்... ரஜினியுடன் போட்டிதான், பொறாமை இல்லை: கமல் பேட்டி | கருப்பு : இரண்டே நாளில் 50 கோடி வசூல் ? |

சென்னையில் நடந்த அறியாத பசங்க என்ற பட விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மூத்த இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் பேசியது : பள்ளியில் படிக்கும் போது சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்று பேசியவன் நான். சென்னைக்கு வந்து ஏவிஎம் ஸ்டூடியோவில் சேர்ந்தேன். ஆரம்பத்தில் எடிட்டிங் பழகினேன். பின்னர் உதவி இயக்குனராக வேலை செய்தேன். 20 ஆண்டுகளுக்கு பின் தான் கனி முத்து பாப்பா படத்தில் இயக்குனர் ஆனேன். என் அஸ்திவாரம் வலுவானது.
80 ஆண்டுகள் பாரம்பரியம் உள்ள ஏ.வி.எம் நிறுவனம் இப்பொழுது படம் தயாரிப்பதில்லை. இது குறித்து அவர்களிடம் கேட்ட போது இப்போது படம் தயாரித்து விடலாம் ஆனால் வியாபாரம் செய்வது கஷ்டமாக இருக்கிறது என்கிறார்கள். அதனால்தான் அவர்கள் படம் தயாரிப்பதில்லை. அந்த காலத்தில் ஏவிஎம் நிறுவனத்தை உருவாக்கிய ஏவி. மெய்யப்ப செட்டியார் பக்கா ஸ்கிரிப்ட் இருந்தால் தான் ஒரு படத்தை தொடங்குவார். அதனால் தான் ஏவிஎம் படங்கள் வெற்றி பெற்றன. உழைப்பு ஒழுக்கம் இருந்தால் சினிமாவில் ஜெயிக்கலாம். இவ்வாறு பேசினார்.