'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு | சத்ய சாய் பாபாவின் மகிமையை சொல்லும் ‛அனந்தா' : நவ., 23ல் வெளியீடு | கிஸ் முதல் நெட்வொர்க் வரை... இந்த வாரா ஓடிடி ரிலீஸ்...! | ''பீரியட் படம் பண்ணுவது தனி அனுபவம்... டைம் மிஷின் மூலம் அந்த காலம் செல்வது மாதிரி'': துல்கர் சல்மான் | ரோஜா 'கம்பேக்': 'லெனின் பாண்டியன்' படத்தில் நடிக்கிறார் | மணிரத்னம் படம் : சிம்புவிற்கு பதில் விஜய் சேதுபதி | ரஜினிகாந்த்தை 'தலைவர்' எனக் குறிப்பிட்ட கமல்ஹாசன் | ஹரிஷ் கல்யாண் அடுத்து நடிக்கும் இரண்டு படங்கள் | நவம்பர் 21ல் திரைக்கு வரும் ‛தீயவர் குலை நடுங்க' | படப்பிடிப்புக்காக ஹனிமூனை மாற்றிய ஹீரோ |

சென்னையில் நடந்த அறியாத பசங்க என்ற பட விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மூத்த இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் பேசியது : பள்ளியில் படிக்கும் போது சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்று பேசியவன் நான். சென்னைக்கு வந்து ஏவிஎம் ஸ்டூடியோவில் சேர்ந்தேன். ஆரம்பத்தில் எடிட்டிங் பழகினேன். பின்னர் உதவி இயக்குனராக வேலை செய்தேன். 20 ஆண்டுகளுக்கு பின் தான் கனி முத்து பாப்பா படத்தில் இயக்குனர் ஆனேன். என் அஸ்திவாரம் வலுவானது.
80 ஆண்டுகள் பாரம்பரியம் உள்ள ஏ.வி.எம் நிறுவனம் இப்பொழுது படம் தயாரிப்பதில்லை. இது குறித்து அவர்களிடம் கேட்ட போது இப்போது படம் தயாரித்து விடலாம் ஆனால் வியாபாரம் செய்வது கஷ்டமாக இருக்கிறது என்கிறார்கள். அதனால்தான் அவர்கள் படம் தயாரிப்பதில்லை. அந்த காலத்தில் ஏவிஎம் நிறுவனத்தை உருவாக்கிய ஏவி. மெய்யப்ப செட்டியார் பக்கா ஸ்கிரிப்ட் இருந்தால் தான் ஒரு படத்தை தொடங்குவார். அதனால் தான் ஏவிஎம் படங்கள் வெற்றி பெற்றன. உழைப்பு ஒழுக்கம் இருந்தால் சினிமாவில் ஜெயிக்கலாம். இவ்வாறு பேசினார்.