சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் | ஒரே படத்தில் 3 ஹீரோயின்கள் | தேவயானி அடித்தால் எப்படி இருக்கும் தெரியுமா? : ராஜகுமாரன் சொன்ன அதிர்ச்சி தகவல் | நான் நடிகர் ஆன கதை : ரஞ்சித் சொன்ன பிளாஷ்பேக் |
சென்னையின் பாரம்பரியமிக்க தியேட்டர்கள் மல்டி பிளக்ஸ் தியேட்டர்களாகி அதன் அடையாளத்தை இழந்து வருகிறது. பல தியேட்டர்கள் சுவடே தெரியாமல் இடிக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில் பாரம்பரியமிக்க ஏவிஎம் ஸ்டூடியோவின் பல பகுதிகள் இடிக்கப்பட்டு, அடுக்குமாடி குடியிருப்புகள், மருத்துவமனைகள் கட்டப்பட்டு விட்டது.
இந்த நிலையில் தமிழ் சினிமாவின் குறிப்பாக சினிமா கலைஞர்கள் அதிகமாக வாழும் வட பழனியின் அடையாளமாக இருந்த ஏவிஎம் ரஜேஸ்வரி தியேட்டர் இடிக்கப்பட்டு வருகிறது. ஏ.வி.மெய்யப்ப செட்டியார் தனது மனைவி ராஜேஸ்வரி பெயரில் கட்டத் தொடங்கிய தியேட்டர், அவரது மறைவிற்கு பிறகு 1979ம் ஆண்டு செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தியன்று திறக்கப்பட்டது. இந்த தியேட்டரில் ஆரம்பத்தில் டிக்கெட் கட்டணம் 2 ரூபாய் 50 காசுகளாக இருந்தது. கடைசி கட்டணம் 60 ரூபாய்.
நல்ல நிலையில் செயல்பட்டு வந்த தியேட்டர் கொரோனா காலத்தில் போதிய பராமரிப்பின்றி சிதிலமடைந்தது. இதனால் கொரோனா சமயத்தில் மூடப்பட்ட பல தியேட்டர்களின் பட்டியலில் இந்த தியேட்டரும் இணைந்தது. ஏ.வி.எம். நிர்வாகத்தினர், அந்த இடத்தை ஒரு கட்டுமான நிறுவனத்திடம் விற்றுவிட்டனர்.
தற்போது அந்த நிறுவனம் பல அடுக்கு மாடிகளை கொண்ட அலுவலம் மற்றும் குடியிருப்பை கட்டுகிறது. அதன் கட்டுமான பணிகளை தொடங்குவதற்காக தியேட்டரை இடிக்கும் பணியை தொடங்கி உள்ளது. தியேட்டரோடு மலரும் நினைவுகளை கொண்ட திரைப்பட கலைஞர்களும், ரசிகர்களும், இடிக்கப்படும் தியேட்டரை வேதனையோடு பார்த்துச் செல்கிறார்கள்.