சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

சென்னையின் பாரம்பரியமிக்க தியேட்டர்கள் மல்டி பிளக்ஸ் தியேட்டர்களாகி அதன் அடையாளத்தை இழந்து வருகிறது. பல தியேட்டர்கள் சுவடே தெரியாமல் இடிக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில் பாரம்பரியமிக்க ஏவிஎம் ஸ்டூடியோவின் பல பகுதிகள் இடிக்கப்பட்டு, அடுக்குமாடி குடியிருப்புகள், மருத்துவமனைகள் கட்டப்பட்டு விட்டது.
இந்த நிலையில் தமிழ் சினிமாவின் குறிப்பாக சினிமா கலைஞர்கள் அதிகமாக வாழும் வட பழனியின் அடையாளமாக இருந்த ஏவிஎம் ரஜேஸ்வரி தியேட்டர் இடிக்கப்பட்டு வருகிறது. ஏ.வி.மெய்யப்ப செட்டியார் தனது மனைவி ராஜேஸ்வரி பெயரில் கட்டத் தொடங்கிய தியேட்டர், அவரது மறைவிற்கு பிறகு 1979ம் ஆண்டு செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தியன்று திறக்கப்பட்டது. இந்த தியேட்டரில் ஆரம்பத்தில் டிக்கெட் கட்டணம் 2 ரூபாய் 50 காசுகளாக இருந்தது. கடைசி கட்டணம் 60 ரூபாய்.
நல்ல நிலையில் செயல்பட்டு வந்த தியேட்டர் கொரோனா காலத்தில் போதிய பராமரிப்பின்றி சிதிலமடைந்தது. இதனால் கொரோனா சமயத்தில் மூடப்பட்ட பல தியேட்டர்களின் பட்டியலில் இந்த தியேட்டரும் இணைந்தது. ஏ.வி.எம். நிர்வாகத்தினர், அந்த இடத்தை ஒரு கட்டுமான நிறுவனத்திடம் விற்றுவிட்டனர்.
தற்போது அந்த நிறுவனம் பல அடுக்கு மாடிகளை கொண்ட அலுவலம் மற்றும் குடியிருப்பை கட்டுகிறது. அதன் கட்டுமான பணிகளை தொடங்குவதற்காக தியேட்டரை இடிக்கும் பணியை தொடங்கி உள்ளது. தியேட்டரோடு மலரும் நினைவுகளை கொண்ட திரைப்பட கலைஞர்களும், ரசிகர்களும், இடிக்கப்படும் தியேட்டரை வேதனையோடு பார்த்துச் செல்கிறார்கள்.