'வாரணாசி' முன்னோட்ட வரவேற்பு: ராஜமவுலியின் நன்றி | மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! |

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் ஜெய்சங்கர். தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட் என அழைக்கப்பட்டார். கடந்த 2000ம் ஆண்டில் இவர் மறைந்தார். சென்னை, நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் இருந்த வீட்டில் பல ஆண்டுகள் வசித்தார் ஜெய்சங்கர். இவர் வீடு இருந்த கல்லூரி சாலைக்கு அவர் பெயரை சூட்ட வேண்டும் என ஜெய்சங்கர் மகனான டாக்டர் விஜயசங்கர், முதல்வரிடம் கோரிக்கை விடுத்தார்.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி கூட்டத்தில் கடந்த ஜூலை 30ம் தேதி தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையை ‛ஜெய்சங்கர் சாலை' என பெயர் மாற்றப்பட்டு அரசாணையும் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் ‛ஜெய் சங்கர் சாலை' இன்று திறக்கப்பட்டது. சென்னை, தலைமை செயலகத்தில் இருந்தபடி முதல்வர் ஸ்டாலின் இதை காணொளி வாயிலாக திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் ஜெய்சங்கர் மகன் டாக்டர் விஜயசங்கர் உள்ளிட்ட குடும்பத்தினர் பங்கேற்றனர்.
இதேப்போல் சென்னை, மந்தைவெளிப்பாக்கம் 5வது குறுக்கு தெருவிற்கு நாடக நடிகர் எஸ்வி வெங்கடராமன் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த சாலையையும் முதல்வர் திறந்து வைத்தார்.