'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடி தானா? | கென் கருணாஸூக்காக காய்ச்சல் உடன் வந்த தனுஷ்! | மார்ச் 16ல் 'நூறு சாமி' படத்தின் பர்ஸ்ட் லுக் | இரண்டு பாகங்களாக பிரியும் இதயம் முரளி! | மே மாதத்தில் திட்டமிடும் 'கருப்பு' படக்குழு! | மென்மையானவர் விஜய்... நல்ல குடும்பஸ்தர் அஜித்: மனம் திறந்த தமன்னா | 'திரு.மாணிக்கம்' திரைக்கதை புத்தகமாக வெளியீடு | தெலுங்கானா டிக்கெட் கட்டண உயர்வு : தடையை நீக்கிய உச்சநீதிமன்றம் | 3 படங்கள் 1000 கோடி முதலீடு, மீண்டு வருமா தயாரிப்பு நிறுவனம் ? | முதல்வர் ஸ்டாலினின் வாழ்க்கை படமாகிறது: சமுத்திரக்கனி இயக்குகிறார்? |

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் ஜெய்சங்கர். தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட் என அழைக்கப்பட்டார். கடந்த 2000ம் ஆண்டில் இவர் மறைந்தார். சென்னை, நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் இருந்த வீட்டில் பல ஆண்டுகள் வசித்தார் ஜெய்சங்கர். இவர் வீடு இருந்த கல்லூரி சாலைக்கு அவர் பெயரை சூட்ட வேண்டும் என ஜெய்சங்கர் மகனான டாக்டர் விஜயசங்கர், முதல்வரிடம் கோரிக்கை விடுத்தார்.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி கூட்டத்தில் கடந்த ஜூலை 30ம் தேதி தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையை ‛ஜெய்சங்கர் சாலை' என பெயர் மாற்றப்பட்டு அரசாணையும் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் ‛ஜெய் சங்கர் சாலை' இன்று திறக்கப்பட்டது. சென்னை, தலைமை செயலகத்தில் இருந்தபடி முதல்வர் ஸ்டாலின் இதை காணொளி வாயிலாக திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் ஜெய்சங்கர் மகன் டாக்டர் விஜயசங்கர் உள்ளிட்ட குடும்பத்தினர் பங்கேற்றனர்.
இதேப்போல் சென்னை, மந்தைவெளிப்பாக்கம் 5வது குறுக்கு தெருவிற்கு நாடக நடிகர் எஸ்வி வெங்கடராமன் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த சாலையையும் முதல்வர் திறந்து வைத்தார்.




