தோட்டா தரணிக்கு செவாலியே விருது | மீண்டும் ரஜினியை இயக்குவது போன்று கமலையும் இயக்குவீர்களா? சுந்தர்.சி கொடுத்த பதில் | நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் | ‛இன்று போய் நாளை வா' : கே.பாக்யராஜ் சொன்ன பிளாஷ்பேக் | ராஜமவுலி படத்தில் ஸ்ருதிஹாசன் பாடிய பாடல் வெளியீடு | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ராதிகா ஆப்தே படம் | அனந்தா படத்தில் நடந்த அதிசயங்கள் : சத்யசாய்பாபா மகிமை சொன்ன சுரேஷ் கிருஷ்ணா | டப்பிங் பணிகளை துவங்கிய அபிஷன், அனஸ்வரா | தமிழகத்தில் வெளியாகும் ஆஸ்கர் பரிந்துரை படம் | அன்னை இல்லத்தில் இருந்து அடுத்து வாரிசு: ரஜினி ஆசி |

இப்போதெல்லாம் 10 படங்களில் ஒன்று உண்மை சம்பவத்தின் அடிப்படையிலானது என்று விளம்பரம் செய்யப்படுகிறது. ஆனால் தமிழ் சினிமாவில் உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட முதல் படம் என்று 'மின்மினி' படத்தை குறிப்பிடலாம்.
1953ம் ஆண்டு வெளியான இந்த படம் அப்போது பரபரப்பாக பேசப்பட்ட லட்சுமிகாந்தன் கொலை வழக்கை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது. டி.வி.ராம்நாத், கிருஷ்ணசாமி இயக்கிய இந்த படத்தின் திரைக்கதையை டி.எஸ்.எஸ்.மணி எழுதினார். விஜயகுமார், மங்களம், கிருஷ்ணா சர்மா, மேனகாக என்ற புதுமுகங்கள் நடித்தார்கள்.
'மின்மினி'யின் நாயகன் வேடத்தில் நடித்த எம்.எஸ்.விஜயகுமார் என்பவர் ராயப்பேட்டையில் இருந்த பழைய உட்லண்ட்ஸ் ஓட்டலில் வரவேற்பாளராக இருந்தவர். 6 ஆயிரம் அடி படம் வளர்ந்த நிலையில் தயாரிப்பாளருக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட படம் பாதியில் நின்றது. பின்னர் 'மின்மினி' படப்பெட்டி தயாரிப்பாளரின் கடனை அடைக்க ஏலம் விடப்பட்டது. பின்னர் ஒருவழியாக படப்பெட்டியை கைப்பற்றி மீதிப் படத்தை முடித்தார்கள்.
கோர்ட் உத்தரவின்படி ''இது ஒரு கற்பனைக் கதைதான். இதில் சித்தரிக்கப்படும் சம்பவங்கள் யாரையும் குறித்தவை அல்ல,'' என்ற அறிவிப்புடன் 'மின்மினி' வெளியானது. கொலை செய்யப்பட்ட லட்சுமிகாந்தன் சினிமா தூது, இந்து நேசன் இதழ்களை நடத்தினார். படத்தின் நாயகன் 'மின்மினி' என்ற இதழை நடத்துவது போன்று சித்தரிக்கப்பட்டது.




