'கைதி 2' விரைவில் டீசருடன் அறிவிப்பு | பெங்களூருவின் புகழ் பெற்ற ஊர்வசி தியேட்டர் நிரந்தர மூடல் | காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி |

நடிகர் சிரஞ்சீவி தனது இரண்டாவது இன்னிங்ஸில் இளம் நடிகர்களுக்கு சவால் விடும் வகையில் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்தாண்டு ஆச்சார்யா, காட்பாதர் என இரண்டு படங்களில் நடித்தார் சிரஞ்சீவி. இதில் ஆச்சார்யா படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது. காட்பாதர் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெற தவறியது. அதேசமயம் இந்தாண்டு துவக்கத்தில் அவர் நடிப்பில் வெளியான வால்டர் வீரய்யா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தற்போது வேதாளம் படத்தின் ரீமேக்காக உருவாக்கி வரும் போலோ சங்கர் என்கிற படத்தில் நடித்து வருகிறார் சிரஞ்சீவி.
வால்டர் வீரய்யா படத்தின் வெற்றிக்கு அந்த படத்தில் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் ரவிதேஜாவும் இணைந்து நடித்திருந்தது முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. இதை கவனத்தில் கொண்ட சிரஞ்சீவி அடுத்ததாக தன்னை தேடி வந்து சோக்காடே சின்னி நாயனா இயக்குனர் கல்யாண் கிருஷ்ணா குரசாலா சொன்ன கதையில் இன்னொரு இளம் நடிகருக்கான கதாபாத்திரமும் இருந்ததால் ரொம்பவே உற்சாகமாகி விட்டாராம். அந்த கதாபாத்திரத்தில் இளம் நடிகர் சித்து ஜொன்னலகடா நடிக்க உள்ளாராம். தனது அடுத்தடுத்த படங்களில் இப்படி இன்னொரு இளம் நடிகரும் நடிக்கும் வகையில் பார்த்துக் கொள்ள முடிவு செய்து விட்டாராம் சிரஞ்சீவி.




