சசிகுமாரின் அடுத்த படத்திலும் இலங்கை பின்னணி கதை | திரைகதையில் திருத்தம்: வா வாத்தியாருக்கு மறுபடப்பிடிப்பு | பிளாஷ்பேக் : அரசு விருது பெற்ற முதல் தமிழ் படம் | பிளாஷ்பேக்: மலேசிய வாசுதேவன் இயக்கிய ஒரே படம் | பிளாஷ்பேக் : இந்தியா முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோல்வி அடைந்த 'அப்னா தேஷ்' | ஒரே படம் ஓஹோ வாழ்க்கை... கன்னாபின்னான்னு இழுக்கப்படும் பெயர் : கவலையில் கயாடு லோஹர் | சினிமாவில் 60வது ஆண்டை தொட்ட வெண்ணிற ஆடை மூர்த்தி | ஜெயமோகன் படத்துக்கு இந்த நிலையா? | வில்லனாக மாறிய சேரன் | டான்ஸ் ஆட வெச்சிட்டாங்க : பிரபு நெகிழ்ச்சி |
சில ஆண்டுகளுக்கு முன் மலையாளத்தில் 'மை லைப் பார்ட்னர் என்கிற படத்தில் ஓரினச் சேர்க்கையாளராக நடித்து சிறந்த நடிகருக்கான கேரளா அரசு விருது பெற்றவர் இளம் நடிகர் சுதேவ் நாயர். ஆனால் அடுத்ததாக பிரித்விராஜூடன் இணைந்து நடித்த 'அனார்கலி' படத்தின் மூலம் தான் இவர் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானார். அது மட்டுமல்ல இயல்பிலேயே பாடி பில்டரான இவர் நிவின்பாலியுடன் இணைந்து நடித்த துறமுகம் படத்திற்காக தொப்பை வளர்த்து நடித்து ஆச்சரியப்படுத்தினார்.
இந்த நிலையில் தற்போது முதல் முறையாக தெலுங்கு திரையுலகில் அடி எடுத்து வைத்துள்ளார் சுதேவ் நாயர். தெலுங்கில் இளம் நடிகர் நிதின் நடிக்கும் படத்தில் அவருக்கு வில்லனாக அறிமுகமாகிறார் சுதேவ் நாயர். இந்த படத்தை இயக்குனர் வக்கந்தம் வம்சி இயக்குகிறார். கதாநாயகியாக ஸ்ரீ லீலா நடிக்கும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.