மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

சில ஆண்டுகளுக்கு முன் மலையாளத்தில் 'மை லைப் பார்ட்னர் என்கிற படத்தில் ஓரினச் சேர்க்கையாளராக நடித்து சிறந்த நடிகருக்கான கேரளா அரசு விருது பெற்றவர் இளம் நடிகர் சுதேவ் நாயர். ஆனால் அடுத்ததாக பிரித்விராஜூடன் இணைந்து நடித்த 'அனார்கலி' படத்தின் மூலம் தான் இவர் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானார். அது மட்டுமல்ல இயல்பிலேயே பாடி பில்டரான இவர் நிவின்பாலியுடன் இணைந்து நடித்த துறமுகம் படத்திற்காக தொப்பை வளர்த்து நடித்து ஆச்சரியப்படுத்தினார்.
இந்த நிலையில் தற்போது முதல் முறையாக தெலுங்கு திரையுலகில் அடி எடுத்து வைத்துள்ளார் சுதேவ் நாயர். தெலுங்கில் இளம் நடிகர் நிதின் நடிக்கும் படத்தில் அவருக்கு வில்லனாக அறிமுகமாகிறார் சுதேவ் நாயர். இந்த படத்தை இயக்குனர் வக்கந்தம் வம்சி இயக்குகிறார். கதாநாயகியாக ஸ்ரீ லீலா நடிக்கும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.




