போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

மலையாள சினிமாவில் கடந்த 2016ல் மோகன்லால் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் புலிமுருகன். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தான் மலையாள படங்களின் பட்ஜெட்டும் வியாபார எல்லையும் விரிய ஆரம்பித்தது. இந்தப்படத்தை இயக்குனர் வைசாக் இயக்கி இருந்தார்.
இந்தநிலையில் ஆறு வருடங்கள் கழித்து மீண்டும் மோகன்லாலை வைத்து மான்ஸ்டர் என்கிற படத்தை இயக்கியுள்ளார் வைசாக். புலிமுருகன் படத்திற்கு கதை எழுதிய கதாசிரியர் உதயகிருஷ்ணா தான் இந்த படத்திற்கும் கதை எழுதியுள்ளார். இவர்கள் மூவரின் கூட்டணி மான்ஸ்டர் மூலம் திரும்பிவந்து இருப்பதால் ரசிகர்கள் புலி முருகன் படத்தை போன்றே இந்த படத்தையும் மாசாக எதிர்பார்க்கிறார்கள்..
இந்த படம் நாளை அக்டோபர் 21ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இந்த படம் குறித்து இயக்குனர் வைசாக் ஒரு பேட்டியில் கூறும்போது, “இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியானதில் இருந்தே, இந்த படம் புலி முருகனுக்கு சமமாக இருக்குமா இல்லை புலி முருகனை விட மேலாக இருக்குமா என்பது போன்ற கேள்விகள் தான் அதிகம் வருகிறது. புலிமுருகன் படத்துடன் இந்த படத்தை தயவுசெய்து ஒப்பிட வேண்டாம்.. புலிமுருகன் முழுக்க முழுக்க ஆக்ஷன் படம். ஆனால் மான்ஸ்டர் ஒரு இன்வெஸ்டிகேஷன் திரில்லர்.
இந்த படத்தில் இரண்டு சண்டைக் காட்சிகள் மட்டுமே உள்ளன. அதேசமயம் இந்த இரண்டு சண்டைக்காட்சிகளும் மலையாள சினிமாவில் இதுவரை பார்த்திராத, இதுவரை யாரும் முயற்சித்த புதுமையான வகையில் படமாக்கப்பட்டுள்ளன. இந்த படம் புலன் விசாரணை சம்பந்தமான படம் என்பதால் ரசிகர்கள் படம் துவங்கியதிலிருந்து சற்றே பொறுமையுடன் இந்த படத்துடன் பயணித்தால் பல அற்புதமான விஷயங்கள் அவர்களுக்காக இதில் காத்திருக்கின்றன” என்று கூறியுள்ளார்.