படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

சினிமாவில் ஏழை மக்களுக் ஓடி, ஓடி உதவி செய்கிறவர் என்.டி.பாலகிருஷ்ணா. ஏழை மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் பறந்து பறந்து அடித்து வில்லன்களை துவம்சம் செய்கிறவர். ஆனால் சொந்த வாழ்க்கையில் தன்னை எம்.எல்.ஏ ஆக்கிய மக்களை அவர் திரும்பிக்கூட பார்ப்பதில்லையாம். தொகுதி பக்கம் தலைவைத்துகூட படுப்பதில்லையாம். இப்படி அவர் தொகுதி மக்களே போலீசில் புகார் அளித்திருக்கிறார்கள்.
இந்துபுரம் தொகுதியில் ஏற்கனவே சட்டசபை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட பாலகிருஷ்ணா, சமீபத்தில் நடந்த தேர்தலிலும் இதே தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்றார். தொடர்ந்து இரண்டு முறை இந்துபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்.
இந்த நிலையில்தான் பாலகிருஷ்ணா மீது போலீசில் தொகுதி மக்கள் புகார் அளித்துள்ளனர். அவர்கள் அளித்துள்ள புகார் மனுவில் ''இரண்டு முறை எம்.எல்.ஏ.வாக இருக்கும் பாலகிருஷ்ணா தொகுதியை கண்டுகொள்வது இல்லை. தொகுதியில் நிலவும் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை. என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். இது எதிர்கட்சிகளின் சதி என்று பாலகிருஷ்ணாவின் ரசிகர்கள் கொந்தளிக்கிறார்கள்.