20 கோடி கடன் வரவில்லை.. யாரும் போன் எடுக்கலை..: கே. ராஜன் பற்றி அவர் குடும்பத்தினர் | ஹாலிவுட் பாணியில் 'டாக்ஸிக்' படத்தின் விநியோக முறையை பின்பற்றும் யஷ்! | ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடித்து வரும் பிரபாஸ்! | கிரிக்கெட் வீரர் திலக் வர்மாவுடன் காதலா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்ரீலீலா! | இயக்குனர் கஸ்தூரிராஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ள 'ஹபீபி' மே 28 ல் ரிலீஸ் | நாகரிகமற்ற கேள்விகள்: கோபமடைந்த மாளவிகா மோகனன் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரை முதன்முதலாக பார்த்து, வியந்து நின்ற சாண்டோ எம் எம் ஏ சின்னப்பதேவர் | நடிகர் முத்துக்காளை மனைவி காலமானார்! | 'கருப்பு' படம் மூன்று நாளில் ரூ.147 கோடி வசூல் | கார்த்திக் சுப்பராஜ் படத்திற்கு இளையராஜா இசை |

பழம்பெரும் தெலுங்கு நடிகர் கிருஷ்ணம் ராஜூ சமீபத்தில் மரணம் அடைந்தார். இவர் நடிகர் பிரபாஸின் பெரியப்பா. பிரபாஸை சினிமாவுக்கு கொண்டு வந்ததில் இவருக்கு பெரும் பங்கு உண்டு. கிருஷ்ணம் ராஜூ பிறந்த ஊரான கிழக்கு கோதாவரி மாவட்டம் மொகல்தூர் கிராமத்தில் நினைவஞ்சலி கூட்டம் நடந்தது. இதில் பிரபாஸ் கலந்து கொண்டார்.
இந்த கூட்டத்தில் தனது பெரியப்பா பெயரில் அறக்கட்டளை தொடங்குவதாகவும், முதல் கட்டமாக அந்த அறக்கட்டளைக்கு 3 கோடி ரூபாய் கொடுப்பதாகவும் பிரபாஸ் அறிவித்தார். இந்த விழாவில் பங்கேற்க வந்த நடிகையும், ஆந்திர மாநில நகர்புற வளர்ச்சிதுறை வாரிய தலைவருமான ரோஜாவும் கலந்து கொண்டார். அவர், கிருஷ்ணம் ராஜு பிறந்த இந்த ஊரில் அரசு அவருக்கு நினைவிடம் கட்ட ஏற்பாடு செய்யும், இதற்காக 2 ஏக்கர் நிலம் ஒதுக்கித் தரப்படும் என்று அறிவித்தார்.
இந்த நிகழ்வில் பிரபாஸ் ஒரு லட்சம் பேருக்கு விருந்து அளித்தார். பிரபாஸ் சொந்த கிராமத்திற்கு வந்ததை அறிந்து லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர். போலீஸார் அவர்களை மிகவும் சிரமப்பட்டு கட்டுப்படுத்தினார்கள். வீட்டின் பால்கனியில் நின்று அவர் ரசிகர்களின் அன்பை ஏற்றுக் கொண்டார்.