Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

நடிகர் மீதான புகாரை வாபஸ் பெற்ற பெண் தொகுப்பாளர்

01 அக், 2022 - 15:55 IST
எழுத்தின் அளவு:
Female-anchor-withdraws-complaint-against-actor

கடந்த வாரம் மலையாளத்தில் சட்டம்பி என்கிற திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள இளம் நடிகர் ஸ்ரீநாத் பாஷி என்பவர் அந்த படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிக்காக யு-டியூப் சேனல் ஒன்றில் கலந்துகொண்டு பேட்டியளித்தார். அப்போது அந்த நிகழ்ச்சியின் பெண் தொகுப்பாளர் கேட்ட சில கேள்விகளால் எரிச்சலடைந்த அவர், தொகுப்பாளினியை அநாகரிக வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதைத் தொடர்ந்து அவர் மீது அளிக்கப்பட்ட புகாரின் பேரில் காவல்துறை அவரை கைது செய்தது. பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார் ஸ்ரீநாத் பாஷி. இவரது இந்த செயல் காரணமாக மலையாள தயாரிப்பாளர் சங்கம் இவர்மீது தற்காலிக தடை விதித்தது. இந்த நிலையில் நேற்று நடிகர் ஸ்ரீநாத் பாஷி மீது தான் கொடுத்திருந்த புகாரை வாபஸ் பெற்றுள்ளார் சம்பந்தப்பட்ட பெண் தொகுப்பாளர்.

இதுகுறித்து அவர் கூறும்போது, 'எனக்கு ஏற்பட்ட இதுபோன்ற ஒரு நிகழ்வு வரும் நாட்களில் இன்னொரு பெண்ணுக்கு ஏற்படக்கூடாது என்பதற்காகத்தான் சம்பந்தப்பட்ட நடிகர் மீது காவல்துறையில் புகார் அளித்தேன். அதன்பிறகு அந்த நடிகர் என்னை தொடர்பு கொண்டு பேச முயற்சித்தபோது அதை தவிர்த்துவிட்டேன். இந்தநிலையில் மலையாள தயாரிப்பாளர் சங்கம் அவர் மீது தற்காலிக தடை விதித்ததுடன் அது குறித்து பேசுவதற்காக தயாரிப்பாளர் சங்கத்திற்கு என்னை அழைத்திருந்தனர். அங்கே நடிகர் ஸ்ரீநாத் பாஷியும் வந்திருந்தார். நீண்ட நேரமாக அவர் அழுது இருந்ததால் கண்கள் கலங்கி இருந்தது. அந்த 50 நிமிட பேச்சில் அவர் தன்னுடைய தவறுகளை உணர்ந்து விட்டார் என்பது எனக்கு நன்றாகவே தெரிந்தது.

எனது நோக்கம் அவரை பழிவாங்க வேண்டும் என்பதல்ல.. என் புகாரால் அவரது குடும்பமும் அவரது திரையுலக பயணமும் பாதிக்கப்படுவதை நான் விரும்பவில்லை. அதனால் காவல் நிலையத்தில் நான் அளித்த புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டேன். பேட்டி கொடுத்த அந்த சமயத்தில் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததால் அப்படி பேசிவிட்டேன் என்றும் கூறி அதற்காக மன்னிப்பு கேட்டார்” என்று கூறியுள்ளார் சம்பந்தப்பட்ட பெண் தொகுப்பாளர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பெரியப்பா பெயரில் அறக்கட்டளை தொடங்கிய பிரபாஸ்பெரியப்பா பெயரில் அறக்கட்டளை ... சிரஞ்சீவிக்கு சங்கடத்தை ஏற்படுத்திய காட்பாதர் டிரைலர் சிரஞ்சீவிக்கு சங்கடத்தை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in