ரசிகர்களை சந்தித்த ரஜினி, அட்வைஸ் செய்த கமல், புதுப்புது அறிவிப்புகள், போஸ்டர்கள் : களைகட்டிய 2026 துவக்கம் | 'மார்க்' டப்பிங் படத்துடன் ஆரம்பமான 2026 வெளியீடுகள் | ரஜினி 173... அஸ்வத் மாரிமுத்துவிற்கு அடிக்கிறது அதிர்ஷ்டம் | 2026ல் எதிர்பார்க்கப்படும் படங்கள் : வசூல் சாதனை புரியுமா ? | ரஜினி 173, கமல் 237, அஜித் 64, தனுஷ் 55 : பொங்கலுக்குள் அறிவிப்புகள் வருமா? | அடுத்தடுத்து மேனேஜர்களை நீக்கிய விஷால், ரவிமோகன் | 100 மில்லியன் கடந்த சிரஞ்சீவி, நயன்தாரா பாடல் | போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? |

மலையாள திரையுலகில் தயாரிப்பாளரும் நடிகருமான விஜய்பாபு மீது கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, சினிமா வாய்ப்பு தருவதாக கூறி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அடித்துத் துன்புறுத்தியதாகவும் துணை நடிகை ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், வெளிநாட்டிற்குச் சென்று கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் தலைமறைவாக இருந்த விஜய்பாபு பின்னர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி கேரளா திரும்பினார். தொடர்ந்து போலீசாரின் விசாரணையில் ஆஜரான அவர், சமீபத்தில் கைது செய்யப்பட்டு, பின் ஜாமினிலும் விடுவிக்கப்பட்டார்.
அதேசமயம் அவர் ஜூன் 27 முதல் ஜூலை 3ஆம் தேதி வரை தினசரி போலீசாரின் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை அடுத்து போலீசார் அவரை தடயங்கள் சேகரிப்பதற்காக புகாரில் கூறப்பட்ட நிகழ்வுகள் நடந்த இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை செய்து வருகின்றனர். இது ஒரு பக்கமிருக்க விஜய்பாபுவின் ஜாமீனை ரத்து செய்யும் விதமாக உச்ச நீதிமன்றத்தை நாட கேரள அரசு முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
காரணம் இது வழக்கமான பாலியல் பலாத்கார வழக்கு என்றால் பெரிய அளவில் கேரள அரசிடம் இருந்து ரியாக்சன் இருந்திருக்காது. ஆனால் விஜய்பாபுவோ லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பும் அளவுக்கு போலீசாருக்கு சவால் விடும் விதமாக வெளிநாட்டிற்கு தப்பிச் சென்று கண்ணாமூச்சி ஆடினார். அவரை கைது செய்ய முடியாமல் போலீஸார் கையை பிசைந்தது கேரள அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. இதனால் விஜய்பாபு மீது கோபத்தில் இருக்கும் கேரள அரசு தற்போது இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.