சினிமா சங்கப் பிரச்னைகள் : தயாரிப்பாளர் சங்கம் போலீசில் புகார் | தங்கர் பச்சான் மகன் படத்தில் நடிக்கும் போது வலியை அனுபவித்து அழுதேன்: ஷாலி | எனது கதையைத்தான் திருடி இருக்கிறார்கள் : 'லாபத்தா லேடிஸ்' கதாசிரியர் குற்றச்சாட்டு | சினிமாவில் நடிப்பது எனது தனிப்பட்ட முடிவு : குஷ்பு மகள் அவந்திகா சொல்கிறார் | பிளாஷ்பேக்: முதல் செஞ்சுரி அடித்த சிவாஜி | பிளாஷ்பேக் : ஒரே படத்துடன் காணாமல் போன நடிகை | 'ஸ்டன்ட் டிசைன்' ஆஸ்கர் விருது அறிவிப்பு: ராஜமவுலி மகிழ்ச்சி | சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பவன் கல்யாண் மகன் | ஹாலிவுட் திரைப்படங்களுக்குக் கட்டுப்பாடு விதிக்கும் சீனா | 2028 முதல் ஆஸ்கர் விருதுகளில் சேர்க்கப்படும் 'ஸ்டன்ட் டிசைன்' |
மலையாள திரையுலகில் தயாரிப்பாளரும் நடிகருமான விஜய்பாபு மீது கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, சினிமா வாய்ப்பு தருவதாக கூறி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அடித்துத் துன்புறுத்தியதாகவும் துணை நடிகை ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், வெளிநாட்டிற்குச் சென்று கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் தலைமறைவாக இருந்த விஜய்பாபு பின்னர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி கேரளா திரும்பினார். தொடர்ந்து போலீசாரின் விசாரணையில் ஆஜரான அவர், சமீபத்தில் கைது செய்யப்பட்டு, பின் ஜாமினிலும் விடுவிக்கப்பட்டார்.
அதேசமயம் அவர் ஜூன் 27 முதல் ஜூலை 3ஆம் தேதி வரை தினசரி போலீசாரின் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை அடுத்து போலீசார் அவரை தடயங்கள் சேகரிப்பதற்காக புகாரில் கூறப்பட்ட நிகழ்வுகள் நடந்த இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை செய்து வருகின்றனர். இது ஒரு பக்கமிருக்க விஜய்பாபுவின் ஜாமீனை ரத்து செய்யும் விதமாக உச்ச நீதிமன்றத்தை நாட கேரள அரசு முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
காரணம் இது வழக்கமான பாலியல் பலாத்கார வழக்கு என்றால் பெரிய அளவில் கேரள அரசிடம் இருந்து ரியாக்சன் இருந்திருக்காது. ஆனால் விஜய்பாபுவோ லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பும் அளவுக்கு போலீசாருக்கு சவால் விடும் விதமாக வெளிநாட்டிற்கு தப்பிச் சென்று கண்ணாமூச்சி ஆடினார். அவரை கைது செய்ய முடியாமல் போலீஸார் கையை பிசைந்தது கேரள அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. இதனால் விஜய்பாபு மீது கோபத்தில் இருக்கும் கேரள அரசு தற்போது இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.