பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
மலையாளத்தில் திரிஷ்யம் 2, டுவல்த் மேன் என தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார் இயக்குனர் ஜீத்து ஜோசப். இதையடுத்து தற்போது மலையாள சினிமாவின் இளம் நடிகரான ஆசிப் அலி என்பவரை வைத்து கூமன் என்கிற படத்தை இயக்கி வருகிறார்.. இதை முடித்த கையுடன் அடுத்ததாக ஏற்கனவே மோகன்லாலை வைத்து இயக்கிய, கொரோனா தாக்கம் காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ள ராம் படத்தின் படப்பிடிப்பை தொடங்குகிறார் ஜீத்து ஜோசப்.
இந்த நிலையில் பிரித்விராஜ் நடிக்கும் படமொன்றை ஜீத்து ஜோசப் இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது மலையாள இயக்குனர் சங்கமான பெப்கா. ஆம்... மலையாள இயக்குனர் சங்கத்திற்கு நிதி திரட்டும் விதமாக இந்த படம் உருவாக இருக்கிறது.
த்ரிஷ்யம் படம் இயக்குவதற்கு முன்னதாகவே பிரித்விராஜ் நடித்த மெமரீஸ் என்கிற சூப்பர் ஹிட் கிரைம் த்ரில்லர் படத்தை ஜீத்து ஜோசப் இயக்கியுள்ளார். தற்போது வெளியாகி வரும் த்ரில்லர் இன்வெஸ்டிகேஷன் படங்களுக்கு ஒரு வழிகாட்டி என்று கூட மெமரிஸ் படத்தை சொல்லலாம்.
அதையடுத்து கடந்த சில வருடங்களுக்கு முன் ஊழம் என்கிற படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றினாலும் அந்த படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு பெறவில்லை. இந்த நிலையில் தான் இவர்கள் மூன்றாவது முறையாக இயக்குனர் சங்கத்திற்காக கூட்டணி சேர்ந்துள்ளனர்..