விவாகரத்து வதந்தி : கடும் கோபத்தை வெளிப்படுத்திய அபிஷேக் பச்சன் | சூர்யாவின் கருப்பு ரிலீஸ் மீண்டும் தள்ளிப் போகிறதா? | ரெட்ட தல படத்தின் டார்க் தீம் பாடல் வெளியானது | சோசியல் மீடியாவில் போட்ட பதிவால் ட்ரோலில் சிக்கிய தமன் | இந்த வார ரிலீஸ் : தியேட்டர்களைக் காப்பாற்றும் 'படையப்பா' | பிறந்தநாள் வாழ்த்து கூறியவர்களுக்கு ரஜினிகாந்த் நன்றி | பாதிக்கப்பட்ட நடிகைக்கு தான் ஆயுள் தண்டனை : நீதிமன்ற தீர்ப்பு குறித்து நடிகை பாக்கியலட்சுமி கருத்து | தியேட்டரில் இயக்குனருக்கும் ரசிகர்களுக்கும் வாக்குவாதம் : சமாதானப்படுத்திய நடிகை | திலீப்பை நடிகர் சங்கத்தில் சேர்ப்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை : ஸ்வேதா மேனன் | 11 மாதங்களுக்கு பிறகு ஓடிடியில் வெளியாகும் டோமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் |

மலையாளத்தில் திரிஷ்யம் 2, டுவல்த் மேன் என தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார் இயக்குனர் ஜீத்து ஜோசப். இதையடுத்து தற்போது மலையாள சினிமாவின் இளம் நடிகரான ஆசிப் அலி என்பவரை வைத்து கூமன் என்கிற படத்தை இயக்கி வருகிறார்.. இதை முடித்த கையுடன் அடுத்ததாக ஏற்கனவே மோகன்லாலை வைத்து இயக்கிய, கொரோனா தாக்கம் காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ள ராம் படத்தின் படப்பிடிப்பை தொடங்குகிறார் ஜீத்து ஜோசப்.
இந்த நிலையில் பிரித்விராஜ் நடிக்கும் படமொன்றை ஜீத்து ஜோசப் இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது மலையாள இயக்குனர் சங்கமான பெப்கா. ஆம்... மலையாள இயக்குனர் சங்கத்திற்கு நிதி திரட்டும் விதமாக இந்த படம் உருவாக இருக்கிறது.
த்ரிஷ்யம் படம் இயக்குவதற்கு முன்னதாகவே பிரித்விராஜ் நடித்த மெமரீஸ் என்கிற சூப்பர் ஹிட் கிரைம் த்ரில்லர் படத்தை ஜீத்து ஜோசப் இயக்கியுள்ளார். தற்போது வெளியாகி வரும் த்ரில்லர் இன்வெஸ்டிகேஷன் படங்களுக்கு ஒரு வழிகாட்டி என்று கூட மெமரிஸ் படத்தை சொல்லலாம்.
அதையடுத்து கடந்த சில வருடங்களுக்கு முன் ஊழம் என்கிற படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றினாலும் அந்த படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு பெறவில்லை. இந்த நிலையில் தான் இவர்கள் மூன்றாவது முறையாக இயக்குனர் சங்கத்திற்காக கூட்டணி சேர்ந்துள்ளனர்..