ஜுலை 4ல் 6 படங்கள் ரிலீஸ் | 2025ன் 6 மாதங்களில் 122 படங்கள் ரிலீஸ் | விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் |
சமீபத்தில் சாய்பல்லவி, ராணா நடிப்பில் தெலுங்கில் விராட பருவம் என்கிற படம் வெளியானது. வேணு உடுகுலா என்பவர் இந்த படத்தை இயக்கி உள்ளார். நக்சலைட் பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தில் நக்சலைட் கதாபாத்திரத்தில் சாய்பல்லவி நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் சாய்பல்லவி மத உணர்வுகள் குறித்து பேசிய வார்த்தைகள் மிகப்பெரிய சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தி தற்போதுதான் ஒருவழியாக அடங்கியுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தை திரையிட அனுமதித்தது தவறு என்றும் இந்த படத்தை மேலும் திரையிட தடை விதிக்க வேண்டும் என்றும் கூறி சென்சார் அதிகாரிகள் மீது ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
ஐதராபாத்தை சேர்ந்த சிபாலிகுமார் என்பவர் சுல்தான் பஜார் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில் இந்த படம் நக்சலைட்டுகளை ஆதரிக்கும் விதமாக உருவாகியுள்ளது. குறிப்பாக அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்தை இந்த படத்தில் காட்டி இருப்பது மிகப்பெரிய தவறு. மேலும் இந்த படத்தின் கதை இளைஞர்களை நக்சல் பக்கம் ஈர்க்கும் விதமாக உருவாகியுள்ளது. இப்படிப்பட்ட படத்திற்கு சென்சார் அதிகாரிகள் தணிக்கை சான்றிதழ் அளித்தது தவறு. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் இந்த படத்தை உடனே தியேட்டரில் வெளியிடுவதற்கு தடை விதிக்கும்படியும் அந்த புகாரில் அவர் கூறியுள்ளார்.