'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! | 20 கிலோ வெயிட் குறைத்த புகைப்படங்களை வெளியிட்ட நடிகை குஷ்பு! | சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் நடிக்கும் ராம் சரண் | விஜய் சினிமாவை விட்டு செல்லக் கூடாது : இயக்குனர் மிஷ்கின் வேண்டுகோள் | இருமுடி கட்டி சபரிமலை சென்ற நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் |
சமீபத்தில் சாய்பல்லவி, ராணா நடிப்பில் தெலுங்கில் விராட பருவம் என்கிற படம் வெளியானது. வேணு உடுகுலா என்பவர் இந்த படத்தை இயக்கி உள்ளார். நக்சலைட் பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தில் நக்சலைட் கதாபாத்திரத்தில் சாய்பல்லவி நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் சாய்பல்லவி மத உணர்வுகள் குறித்து பேசிய வார்த்தைகள் மிகப்பெரிய சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தி தற்போதுதான் ஒருவழியாக அடங்கியுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தை திரையிட அனுமதித்தது தவறு என்றும் இந்த படத்தை மேலும் திரையிட தடை விதிக்க வேண்டும் என்றும் கூறி சென்சார் அதிகாரிகள் மீது ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
ஐதராபாத்தை சேர்ந்த சிபாலிகுமார் என்பவர் சுல்தான் பஜார் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில் இந்த படம் நக்சலைட்டுகளை ஆதரிக்கும் விதமாக உருவாகியுள்ளது. குறிப்பாக அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்தை இந்த படத்தில் காட்டி இருப்பது மிகப்பெரிய தவறு. மேலும் இந்த படத்தின் கதை இளைஞர்களை நக்சல் பக்கம் ஈர்க்கும் விதமாக உருவாகியுள்ளது. இப்படிப்பட்ட படத்திற்கு சென்சார் அதிகாரிகள் தணிக்கை சான்றிதழ் அளித்தது தவறு. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் இந்த படத்தை உடனே தியேட்டரில் வெளியிடுவதற்கு தடை விதிக்கும்படியும் அந்த புகாரில் அவர் கூறியுள்ளார்.