நடிகர் ரோபோ சங்கர் காலமானார் | காசு கொடுத்து என்னை பற்றி மீம்ஸ் போட சொல்கிறார்கள் : பிரியங்கா மோகன் ஆவேசம் | தள்ளி வைக்கப்பட்ட ரவி மோகனின் தனி ஒருவன் 2 | துஷாரா விஜயன் கதையின் நாயகியாக நடிக்கும் வெப் தொடரில் அப்பாஸ் | ரூ.60 கோடி மோசடி : நடிகைகள் ஏக்தா கபூர், பிபாஷா பாசுவுக்கு சிக்கல் | பணம் தேவைப்பட்டது; கட்டாயத்தால் நடிக்க வந்தேன்: இயக்குனர் அனுராக் காஷ்யப் | இந்த வார ஓடிடி ரிலீஸ்....பட்டியல் சிறுசு தான்....ஆனா மிஸ் பண்ணிடாதீங்க...! | சரோஜாதேவி பெயரில் விருது: கர்நாடக அரசு அறிவிப்பு | திஷா பதானி வீட்டில் துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் என்கவுன்டரில் சுட்டுக் கொலை | இட்லி கடை படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி இதோ |
சமீபத்தில் சாய்பல்லவி, ராணா நடிப்பில் தெலுங்கில் விராட பருவம் என்கிற படம் வெளியானது. வேணு உடுகுலா என்பவர் இந்த படத்தை இயக்கி உள்ளார். நக்சலைட் பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தில் நக்சலைட் கதாபாத்திரத்தில் சாய்பல்லவி நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் சாய்பல்லவி மத உணர்வுகள் குறித்து பேசிய வார்த்தைகள் மிகப்பெரிய சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தி தற்போதுதான் ஒருவழியாக அடங்கியுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தை திரையிட அனுமதித்தது தவறு என்றும் இந்த படத்தை மேலும் திரையிட தடை விதிக்க வேண்டும் என்றும் கூறி சென்சார் அதிகாரிகள் மீது ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
ஐதராபாத்தை சேர்ந்த சிபாலிகுமார் என்பவர் சுல்தான் பஜார் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில் இந்த படம் நக்சலைட்டுகளை ஆதரிக்கும் விதமாக உருவாகியுள்ளது. குறிப்பாக அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்தை இந்த படத்தில் காட்டி இருப்பது மிகப்பெரிய தவறு. மேலும் இந்த படத்தின் கதை இளைஞர்களை நக்சல் பக்கம் ஈர்க்கும் விதமாக உருவாகியுள்ளது. இப்படிப்பட்ட படத்திற்கு சென்சார் அதிகாரிகள் தணிக்கை சான்றிதழ் அளித்தது தவறு. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் இந்த படத்தை உடனே தியேட்டரில் வெளியிடுவதற்கு தடை விதிக்கும்படியும் அந்த புகாரில் அவர் கூறியுள்ளார்.