'காந்தி டாக்ஸ்' முதல் 'வித் லவ்' வரை... இந்த வார ஓடிடி வெளியீடுகள்.. | வருங்கால கணவருக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும்! மீனாட்சி சவுத்ரி வெளியிட்ட தகவல் | வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: 'துரந்தர்- 2' படத்தின் டிரைலர் நாளை வெளியாகிறது | ஜான்வி கபூரின் பிறந்தநாளில் வெளியிடப்பட்ட பெத்தி பட போஸ்டர்! | யோகி பாபுவின் 'கெணத்த காணோம்' படத்தின் டிரைலர் வெளியானது! | ரஜினி, கமல் இணையும் படம்: லதா ரஜினிகாந்த் சொன்ன தகவல் | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் 'கார்மேனி செல்வம்' புதிய ரிலீஸ் தேதி | மீண்டும் சிரஞ்சீவி படத்திற்கு இசையமைக்கும் தமன்! | என் போட்டோவை மார்பிங் செய்கின்றனர்!: ரச்சிதா ஆதங்கம் | ரொமான்டிக் திரில்லர் கதையில் உருவாகும் 'ஆசை' |

நடிகர் பிரித்விராஜ் கிட்டத்தட்ட நூறு படங்களில் நடித்து விட்ட நிலையில் லூசிபர் என்கிற படத்தின் மூலம் இயக்குனராகவும் அவதாரம் எடுத்தார். முதல் படத்திலேயே மோகன்லாலை வைத்து இயக்கி வெற்றிப்படமாக்கி மலையாள திரையுலகில் முதன் முறையாக 200 கோடி ரூபாய் வசூலித்த படம் என்கிற பெருமையையும் பெற்றுத் தந்தார். அதைத் தொடர்ந்து மீண்டும் மோகன்லாலை வைத்து ப்ரோ டாடி என்கிற நகைச்சுவை படத்தையும் எடுத்து ஹிட்டாக்கினார்.
தற்போது தான் நடித்து வரும் ஆடுஜீவிதம் படத்தின் படப்பிடிப்பிற்காக வெளிநாட்டில் முகாமிட்டுள்ளார் பிரித்விராஜ். இந்தநிலையில் சோசியல் மீடியா சாட்டிங்கில் ரசிகர்களுடன் பேசும்போது மோகன்லாலை வைத்து இரண்டு படங்கள் இயக்கி விட்டீர்கள்..? மம்முட்டியை வைத்து எப்போது படம் இயக்கப் போகிறீர்கள் என ரசிகர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த பிரித்விராஜ் நிச்சயமாக மம்முட்டியை வைத்து படம் இயக்க இருக்கிறேன் அதற்காக எனது நண்பரும் லூசிபர் பட கதாசிரியருமான நடிகர் முரளிகோபி மம்முட்டிக்கு என்றே ஸ்பெஷலான ஒரு கதையை உருவாக்கி வருகிறார். கதை தயாரானதும் மம்முட்டியின் முன்னால் சென்று கதை சொல்வதற்கு உட்கார இருக்கிறேன்.. ஆனால் முழுக்கதையும் தயாராவதற்கு கொஞ்ச காலம் பிடிக்கும்.. அதுவரை பொறுத்திருங்கள்” என்று கூறியுள்ளார் பிரித்விராஜ்.




