சாதுவன்: ஒரே இரவில் நடக்கும் கதை | அமிதாப் பச்சன் விளம்பரத்திற்கு வியாபாரிகள் எதிர்ப்பு | விவேக் ஓபராயிடம் பண மோசடி செய்த தயாரிப்பாளர் கைது | அவதூறு மோசடி புகார்: 10 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர ஏ.ஆர்.ரஹ்மான் முடிவு | பாலியல் தொல்லை - ஈஷா குப்தா புகார் | கேரளா, தமிழ்நாடு, அஜர்பைஜான் - 3 இடங்களில் 3 முக்கிய படப்பிடிப்புகள் | ‛ரஜினி 170' துவங்கியது : புதிய தோற்றத்தில் ரஜினி | 'தங்கலான்', அதிகம் எதிர்பார்க்கும் மாளவிகா மோகனன் | 'விக்ரம், ஜெயிலர், லியோ' வரிசையில் 'ரஜினி 170' | 'கோஸ்ட், டைகர்' போட்டியை சமாளிக்குமா 'லியோ' ? |
நடிகர் பிரித்விராஜ் கிட்டத்தட்ட நூறு படங்களில் நடித்து விட்ட நிலையில் லூசிபர் என்கிற படத்தின் மூலம் இயக்குனராகவும் அவதாரம் எடுத்தார். முதல் படத்திலேயே மோகன்லாலை வைத்து இயக்கி வெற்றிப்படமாக்கி மலையாள திரையுலகில் முதன் முறையாக 200 கோடி ரூபாய் வசூலித்த படம் என்கிற பெருமையையும் பெற்றுத் தந்தார். அதைத் தொடர்ந்து மீண்டும் மோகன்லாலை வைத்து ப்ரோ டாடி என்கிற நகைச்சுவை படத்தையும் எடுத்து ஹிட்டாக்கினார்.
தற்போது தான் நடித்து வரும் ஆடுஜீவிதம் படத்தின் படப்பிடிப்பிற்காக வெளிநாட்டில் முகாமிட்டுள்ளார் பிரித்விராஜ். இந்தநிலையில் சோசியல் மீடியா சாட்டிங்கில் ரசிகர்களுடன் பேசும்போது மோகன்லாலை வைத்து இரண்டு படங்கள் இயக்கி விட்டீர்கள்..? மம்முட்டியை வைத்து எப்போது படம் இயக்கப் போகிறீர்கள் என ரசிகர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த பிரித்விராஜ் நிச்சயமாக மம்முட்டியை வைத்து படம் இயக்க இருக்கிறேன் அதற்காக எனது நண்பரும் லூசிபர் பட கதாசிரியருமான நடிகர் முரளிகோபி மம்முட்டிக்கு என்றே ஸ்பெஷலான ஒரு கதையை உருவாக்கி வருகிறார். கதை தயாரானதும் மம்முட்டியின் முன்னால் சென்று கதை சொல்வதற்கு உட்கார இருக்கிறேன்.. ஆனால் முழுக்கதையும் தயாராவதற்கு கொஞ்ச காலம் பிடிக்கும்.. அதுவரை பொறுத்திருங்கள்” என்று கூறியுள்ளார் பிரித்விராஜ்.