சொந்த ஊரில் இளையராஜாவிடம் பெற்ற விருது : பாக்யஸ்ரீ போர்ஸ் பெருமை | நடிகராக அறிமுகமாகும் அபிஷன் ஜீவிந்த்துக்கு சிம்ரன் வாழ்த்து | 'ஜனநாயகன்' ரிலீஸ் தாமதம் : விஜய் கருத்து? | தி ராஜா சாப் : பிப்ரவரி 6ல் ஓடிடி ரிலீஸ் | ஆறு வருடங்களாக நடக்கவே முடியாத நான் மூன்றே நாட்களில் நடந்தேன் : அரவிந்த்சாமி | தொடரும் பட இயக்குனரின் புதிய படத்தில் வித்தியாசமான பெயரில் நடிக்கும் மோகன்லால் | ஜனநாயகன் சென்சார் பிரச்சனை : பாலிவுட் எம்பி நடிகர் ஆதரவு | தமிழக அரசின் விருதுகள் : தனுஷ், ஏஆர் ரஹ்மான் நன்றி | இன்னும் இசையை கற்பதால் உழைக்கிறேன் : ‛பத்மபாணி' விருது பெற்ற இளையராஜா பேச்சு | திருமண செய்திகளுக்கு பதில் சொல்ல மறுத்த மிருணாள் தாக்கூர் |

சமீபத்தில் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த வலிமை படம் வெளியானது. இந்த படத்தில் நடித்த பல புதிய நடிகர்கள் ரசிகர்களிடம் சிறப்பு கவனம் பெற்றுள்ளனர். அந்த வகையில் வில்லனாக நடித்த கார்த்திகேயாவின் வலது கரங்களில் ஒருவராக நடித்திருந்தவர் மலையாள நடிகர் துருவன். கார்த்திகேயாவை அஜித் துரத்தும்போது, அவருக்கு பதிலாக இன்னொருவர் ஏமாற்றுவாரே அவர்தான் இந்த தருவன். மலையாளத்தில் வெளியான குயீன் படம் மூலம் திரையுலகில் நுழைந்த இவருக்கு வலிமை திரைப்படம் அங்கே மிகப்பெரிய புகழ் வெளிச்சம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
அஜித்துடன் நடித்த அனுபவம் குறித்து சமீபத்தில் பகிர்ந்து கொண்டுள்ள துருவன், “படப்பிடிப்புக்கு செல்லும் வரை எனக்கு அஜித்துடன் இணைந்து நடிக்க போகிறேன் தெரியாது.. வினோத் டைரக்ஷனில் நடிக்க போகிறேன் என்கிற சந்தோஷத்துடன் படப்பிடிப்புக்கு சென்ற எனக்கு அஜித்துடன் இணைந்து நடிக்கிறேன் என்பது டபுள் போனஸாக அமைந்துவிட்டது.. எல்லோரும் அஜித் சாரின் எளிமையையும் மனிதநேயம் பற்றியும் சொல்வதை கேள்விப்பட்டு உள்ளேன். ஆனால் அதை நேரிலேயே உணர்வேன் என நான் நினைத்துப் பார்த்ததுக்கூட இல்லை..
ஒரு முறை படப்பிடிப்பில் நடித்து கொண்டிருந்தபோது அதிக குளிரால் நடுங்கி கொண்டிருந்தேன். அதை கவனித்த அஜித் அவரது உதவியாளரை அழைத்து எனக்கு சூடாக காப்பி கொடுக்கச் சொன்னதுடன் ஒரு ஹீட்டரையும் வரவைத்து எனக்கு கொடுத்து எனது குளிரை போக்கினார். அவர் இந்த அளவுக்கு செய்ய வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. என்றாலும் சக நடிகரையும் சக மனிதராகவே அவர் பார்க்கிறார் என்பதை உணர முடிந்தது.. ஆனால் இந்த படம் முடிந்து வெளியாகி இப்போதும் கூட என்னிடம் இருக்கும் ஒரே வருத்தம் அஜித் சாருடன் இணைந்து ஒரு போட்டோ கூட எடுத்துக் கொள்ளவில்லையே என்பதுதான்” என கூறியுள்ளார் துருவன்.