ஐஸ்வர்யா ராயை தொடர்ந்து அபிஷேக் பச்சன் வழக்கு: புகைப்படத்தை பயன்படுத்த தடை கோரி மனு | மகளின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே | என் அழகான ஜென்டில்மேன் நடிகரே : ரவி மோகனை வாழ்த்திய சுதா கெங்கரா! | நயன்தாரா ஆவணப்படம் வழக்கு : பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு | 2 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகியுள்ள மிடில் கிளாஸ் | அஜித் 64 படத்தை குறித்து புதிய தகவல் இதோ | மகுடம் பட பிரச்சனையை சுமூகமாக தீர்த்த விஷால் | சசி, விஜய் ஆண்டனி படத்தலைப்பு நூறுசாமி | மினி இட்லியாக சுவைக்கப்படணும் : பார்த்திபன் ஆசை | கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வரும் குஷி ரவி |
மலையாள நடிகர் திலீப் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு நடிகை ஒருவரின் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மூன்றுமாத சிறைத்தண்டனைக்கு பிறகு ஜாமீனில் வெளியே வந்து தற்போது படங்களில் நடித்து வருகிறார். இந்தநிலையில் அவரது நண்பராக இருந்து தற்போது அவருக்கு எதிராக மாறியுள்ள இயக்குனர் பாலச்சந்திர குமார் என்பவர் திலீப் குறித்து போலீஸில் புதிய புகார் அளித்தார்
அதில் திலீப்பின் வழக்கை விசாரிக்கும் விசாரணை அதிகாரிகள் சிலரை தாக்குவதற்கு திலீப் திட்டமிட்டிருந்தார் என்கிற குற்றச்சாட்டும் இருந்தது. இதன் அடிப்படையில் தற்போது திலீப் மீது புதிய வழக்கு பதியப்பட்டு கடந்த மூன்று நாட்களாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையின் முடிவில் தான் திலீப்பிற்கு இந்த புதிய வழக்கில் முன்ஜாமீன் கிடைக்குமா இல்லையா என்பது தெரியவரும்.
அதேசமயம் ஏற்கனவே திலீப் மீது தொடரப்பட்ட முந்தைய வழக்கில் இன்னும் விசாரணைக்கு 6 மாத அவகாசம் தேவை என கேரள அரசு மூலமாக உச்சநீதிமன்றத்தில் தற்போது முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவின் மீதான விசாரணை நேற்று நடைபெற்றது.
அப்போது திலீப்பின் வழக்கறிஞர் வாதாடும்போது, இனிமேலும் கால அவகாசம் கொடுத்து இந்த வழக்கை நீட்டிக்க கூடாது. அப்படி அவகாசம் வேண்டும் என்றால் வழக்கை விசாரிக்கும் நீதிமன்றமே கால அவகாசம் தேவை என விண்ணப்பிக்க வேண்டும்.. ஆனால் இந்த வழக்கை இன்னும் தாமதப்படுத்தும் விதமாகவே கேரள அரசு இதுபோன்று கால அவகாசம் கேட்டு மனு செய்துள்ளது ஏற்கனவே இந்த வழக்கில் கிட்டத்தட்ட 200 சாட்சிகள் விசாரணை செய்யப்பட்டு வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த நிலையில் திடீரென யாரோ ஒரு புதிய நபர் புதிதான சில குற்றச்சாட்டுகளுடன் கிளம்பி இந்த வழக்கை திசை திருப்பும் விதத்தில் செயல்பட்டு வருகிறார். அதனால் இந்த புதிய கால அவகாசம் வழங்கப்பட்டால் அது இந்த வழக்கை வேறு திசையில் இழுத்துச் செல்லும் விதமாக அமைந்து விடும். எனவே இந்த மனுவை நிராகரிக்க வேண்டும் என தனது வாதங்களை முன்வைத்தார். இதனை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் கேரள அரசின் மனுவை தற்சமயம் நிலுவையில் வைக்கும்படி உத்தரவிட்டுள்ளது.