தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவக் கதையா ராதிகாவின் ‛காலனி' | பாடகி ஆஷா போஸ்லே உடல் அரசு மரியாதையுடன் தகனம் | ஜனநாயகன் லீக் ; எடிட்டர் காரணமா... குற்றவாளிகளை நெருங்கிய போலீஸ் : ஆர்கே செல்வமணி பேட்டி | உங்களுக்கு வந்தால் ரத்தம்.. எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா? நயன்தாரா மீது எழும் விமர்சனங்கள் | ரஜினி படத்தை இயக்குகிறாரா அஸ்வத் மாரிமுத்து? கமல் மீது கடும் கோபத்தில் ரஜினி ரசிகர்கள்? | ராஜன் வகையறா படப்பிடிப்பு தொடங்கியது | லீடர், காளிதாஸ் 2, ஹாப்பி ராஜ் படங்கள் மற்றும் கடந்த வார படங்களின் நிலை என்ன? | படம் பிடித்தால் பாருங்க, இல்லைன்னா வேணாம் : மிஸ்டர் எக்ஸ் இயக்குனரின் புதுப்பிரச்சாம் | மாஸ்டர் 2..., லியோ 2... உருவாகிறதா... : மீண்டும் நடிக்கிறாரா விஜய்...? | பிரசாந்த், ஹரி கூட்டணியின் படம் என்னாச்சு |

மலையாள நடிகர் திலீப் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு நடிகை ஒருவரின் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மூன்றுமாத சிறைத்தண்டனைக்கு பிறகு ஜாமீனில் வெளியே வந்து தற்போது படங்களில் நடித்து வருகிறார். இந்தநிலையில் அவரது நண்பராக இருந்து தற்போது அவருக்கு எதிராக மாறியுள்ள இயக்குனர் பாலச்சந்திர குமார் என்பவர் திலீப் குறித்து போலீஸில் புதிய புகார் அளித்தார்
அதில் திலீப்பின் வழக்கை விசாரிக்கும் விசாரணை அதிகாரிகள் சிலரை தாக்குவதற்கு திலீப் திட்டமிட்டிருந்தார் என்கிற குற்றச்சாட்டும் இருந்தது. இதன் அடிப்படையில் தற்போது திலீப் மீது புதிய வழக்கு பதியப்பட்டு கடந்த மூன்று நாட்களாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையின் முடிவில் தான் திலீப்பிற்கு இந்த புதிய வழக்கில் முன்ஜாமீன் கிடைக்குமா இல்லையா என்பது தெரியவரும்.
அதேசமயம் ஏற்கனவே திலீப் மீது தொடரப்பட்ட முந்தைய வழக்கில் இன்னும் விசாரணைக்கு 6 மாத அவகாசம் தேவை என கேரள அரசு மூலமாக உச்சநீதிமன்றத்தில் தற்போது முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவின் மீதான விசாரணை நேற்று நடைபெற்றது.
அப்போது திலீப்பின் வழக்கறிஞர் வாதாடும்போது, இனிமேலும் கால அவகாசம் கொடுத்து இந்த வழக்கை நீட்டிக்க கூடாது. அப்படி அவகாசம் வேண்டும் என்றால் வழக்கை விசாரிக்கும் நீதிமன்றமே கால அவகாசம் தேவை என விண்ணப்பிக்க வேண்டும்.. ஆனால் இந்த வழக்கை இன்னும் தாமதப்படுத்தும் விதமாகவே கேரள அரசு இதுபோன்று கால அவகாசம் கேட்டு மனு செய்துள்ளது ஏற்கனவே இந்த வழக்கில் கிட்டத்தட்ட 200 சாட்சிகள் விசாரணை செய்யப்பட்டு வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த நிலையில் திடீரென யாரோ ஒரு புதிய நபர் புதிதான சில குற்றச்சாட்டுகளுடன் கிளம்பி இந்த வழக்கை திசை திருப்பும் விதத்தில் செயல்பட்டு வருகிறார். அதனால் இந்த புதிய கால அவகாசம் வழங்கப்பட்டால் அது இந்த வழக்கை வேறு திசையில் இழுத்துச் செல்லும் விதமாக அமைந்து விடும். எனவே இந்த மனுவை நிராகரிக்க வேண்டும் என தனது வாதங்களை முன்வைத்தார். இதனை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் கேரள அரசின் மனுவை தற்சமயம் நிலுவையில் வைக்கும்படி உத்தரவிட்டுள்ளது.




