ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி | கலாபவன் மணியின் கனவை நனவாக்கிய மகள் | பேட்ரியாட் படத்தை திரையிடுவதில் கேரள திரையரங்குகள் திடீர் போர்க்கொடி | ஆக்ஷன் மோட் ஆன் : துரந்தர் 2 டிரைலர் வெளியானது | திருமணத்திற்கு ஜோடியாக வந்ததற்கு பதிலடிதான் சங்கீதாவின் புதிய மனு ? | சிரஞ்சீவி, கமல் உள்ளிட்டோருக்கு 2025ன் தெலங்கானா மாநில சினிமா விருதுகள் அறிவிப்பு | 'மேட் இன் கொரியா' இயக்குனர் மனைவியின் கதை : பிரியங்கா மோகன் | இசையில் மட்டும்தான் கவனம்: நடிப்பு தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்த சாய் அபயங்கர் | ப்ளடி பாலிட்டிக்ஸ் : கொடி கம்ப அரசியல் | சந்தானம் ஜோடியான கோபிகா ரமேஷ் |

அரசியலில் இருந்து ஒதுங்கியபின் சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்ஸையும், ஹீரோவாகவே துவங்கிய சிரஞ்சீவி தற்போது கைவசம் நான்கைந்து படங்களை வைத்துள்ளார். கொரட்டாலா சிவா இயக்கத்தில் ஆச்சார்யா படத்தில் நடித்து முடித்துவிட்டவர், தற்போது மோகன்ராஜா இயக்கத்தில் மலையாள லூசிபர் ரீமேக்காக உருவாகும் காட்பாதர் படத்தில் நடித்து வருகிறார்.
இன்னொரு பக்கம் அஜித்தின் வேதாளம் பட ரீமேக்கான போலோ சங்கர் படத்திலும் நடிக்கிறார். இந்தநிலையில் அவரது 154 படமும் கடந்த மாதம் துவங்கியுள்ளது. இந்தப்படத்தை பாபி (கே.எஸ்.ரவீந்திரா) என்பவர் இயக்குகிறார். இந்தப்படத்தில் சிரஞ்சீவி அன்டர்கவர் போலீஸ் ஆபீசராக நடிக்கிறார் என சொல்லப்பட்டு வரும் நிலையில் படத்திற்கு வால்டர் வீரய்யா என டைட்டில் வைக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் நடைபெறும் கதையாக இந்தப்படம் உருவாகிறது.




