சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
பிரபல மலையாள பாடலாசிரியர் பிச்சு திருமலா இன்று(நவ., 26) காலமானார். அவருக்கு வயது 80. கடந்த சில வாரங்களாக உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்த பிச்சு திருமலா கடந்த சில நாட்களாகவே வெண்டிலேட்டர் உதவியுடன் தான் நாட்களை நகர்த்தி வந்தார்.
1972ல் பஜகோவிந்தம் என்கிற மலையாள படத்தின் மூலம் பாடலாசிரியாக நுழைந்த இவர் சுமார் நானூறு படங்களில் பணியாற்றி ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். இரண்டுமுறை கேரளா அரசு விருது உட்பட பல விருதுகளை பெற்றுள்ளார்.
தமிழ் இசையமைப்பாளர்களான எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோரின் இசையிலும் பாடல்கள் எழுதியுள்ளார். மலையாளத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ஒரே படமான யோதாவில் இவர் பாடல் எழுதியுள்ளார். மேலும் மோகன்லால் அறிமுகமான மஞ்சில் விரிஞ்ச பூக்கள் படத்தில் அனைத்து பாடல்களையும் எழுதியது இவர் தான்.