அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து |
வளர்ந்து வரும் கன்னட நடிகை பாவனா கவுடா. தற்போது கன்டிகா, கவுலி, மெஹபூபா, மைசூரு டைரிஸ், பைட்டர், தூதுமதிகே போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார். தற்போது அவர் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் இன். இந்த படம் கொரோனா ஊரடங்கின் போது வீட்டுத் தனிமையில் மாட்டிக் கொண்ட ஒரு இளம் பெண்ணின் பிரச்னைகளை பேசுகிறது. பெங்களூரில் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இந்த படம் உருவாகிறது. படிகர் தேவேந்திரா இயக்குகிறார். பரத் நாயக் இசையமைத்துள்ளார்.
படம் பற்றி பாவனா கூறியதாவது : அனைவரின் வாழ்க்கையிலும் லாக்டவுன் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பெங்களூரில் ஒரு சாதாரண கிராமத்துப் பெண் தனது கனவுகளைத் துரத்துவதையும், இரண்டு மாத லாக்டவுனை அவள் எப்படி எதிர்கொள்கிறாள் என்பதையும் காட்டும் படம் இது. இது லாக்டவுனால் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை தொட முடியாமல் போன ஒவ்வொரு பெண்ணின் வலியையும் பிரதிபலிக்கும். என்கிறார்.