தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கடந்த சில தினங்களுக்கு முன்பு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான படம் குருப். எண்பதுகளில் கேரளாவில் பிரசித்தி பெற்ற குற்றவாளியான சுகுமார குருப் என்பவனை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகியுள்ளது. தன்னுடைய இன்சூரன்ஸ் பணத்தை பெறுவதற்காக சாக்கோ என்கிற இன்னொரு இளைஞரை கொன்று, தான் இறந்து விட்டது போன்று சித்தரித்து தப்பிச் சென்றுவிட்டான் குருப். தற்போதும் தேடப்படும் குற்றவாளி பட்டியலில் தான் குருப் இருக்கிறான். படத்திலும் அதையே தான் காட்டியிருந்தனர்.
இந்த நிலையில் கேரள முன்னாள் டிஜிபி அலெக்சாண்டர் ஜேக்கப் என்பவர் குருப் குறித்து ஒரு ஆச்சரிய தகவலை தெரிவித்துள்ளார். அதாவது சாக்கோ கொலையான அந்த சமயத்திலேயே குருப் மீது சந்தேகம் வந்து போலீசார் அவரை பிடித்து விட்டனராம். ஆனால் அதற்குள் குருப் தன்னுடைய தாடியை எடுத்துவிட்டு புதிதாக மச்சம் ஒன்றை ஒட்டிக்கொண்டு ஆளே மாறி காட்சியளித்துள்ளான். அவனிடமிருந்து கைரேகை பதிவும் எடுக்கப்பட்டது.
ஆனால் அதுகுறித்த ரிசல்ட் வருவதற்கு சில தினங்கள் ஆகும் என்பதால் குருப் உள்ளிட்ட ஒருசில சந்தேகப்பட்ட நபர்களை போலீசார் அனுப்பி வைத்துவிட்டனர். ஆனால் குருப்பின் கைரேகை தான் என்பது தெரியவரும்போது குருப் கேரளாவை விட்டு எஸ்கேப் ஆகி இருந்தான். அதன் பிறகு அவன் போலீசாரிடம் சிக்கவேயில்லை என்று கூறியுள்ளார் அந்த டிஜிபி.