'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! | 20 கிலோ வெயிட் குறைத்த புகைப்படங்களை வெளியிட்ட நடிகை குஷ்பு! | சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் நடிக்கும் ராம் சரண் | விஜய் சினிமாவை விட்டு செல்லக் கூடாது : இயக்குனர் மிஷ்கின் வேண்டுகோள் |
கடந்த சில தினங்களுக்கு முன்பு துல்கர் சல்மான் நடிப்பில் குருப் என்கிற திரைப்படம் வெளியானது. எண்பதுகளில் கேரளாவில் பரபரப்பாக பேசப்பட்ட குருப் என்கிற குற்றவாளியை மையப்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. தான் இறந்து விட்டதாக நாடகமாடி தனது இன்சூரன்ஸ் பணத்தை பெறுவதற்காக கேரளாவை சேர்ந்த சாக்கோ என்கிற இளைஞனை கொலை செய்த குற்றத்திற்காக, தற்போதும் தேடப்படும் குற்றவாளியாக இருக்கும் குரூப் கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ளார்.
அதேசமயம் கொலை செய்யப்பட்ட சாக்கோ கதாபாத்திரத்தை சார்லி என்கிற பெயரில் நடிகர் டொவினோ தாமஸ் நடித்திருந்தார். அவரது மனைவியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்திருந்தார். இவர்கள் இருவருமே படத்தில் இரண்டு நிமிடங்களுக்கும் குறைவான காட்சியிலேயே நடித்திருந்தனர்.
இப்படி இவர்கள் இருவரும் நட்புக்காக தனது படத்தில் நடித்ததற்காக இவர்கள் இருவருக்கும் தனித்தனி போஸ்டர் வெளியிட்டு தனது நன்றியை தெரிவித்துள்ளார் துல்கர் சல்மான். முன்னணி நட்சத்திரங்களாக வலம் வரும் டொவினோ தாமஸ் மற்றும் அனுபமா இருவருமே இன்னொரு முன்னணி நடிகரின் படத்தில் இப்படி சில நிமிடம் வந்து போகும் கெஸ்ட் ரோலில் எடுத்திருக்கிறார்கள் என்றால் ஒரு பெரிய மனது வேண்டும்.