கடைசி நேரத்தில் திடீரென தள்ளி வைக்கப்பட்ட 'அகண்டா 2' | ஏவிஎம் சரவணன் மறைவு : அஜித், விஜய், விக்ரம் அஞ்சலி செலுத்தவில்லை | மரணத்தை வைத்து மீம்ஸ் போடுவதா? ஜான்வி கபூர் கடும் ஆதங்கம்! | ஏவிஎம் சரவணன் உடல் தகனம் | உங்கள் பெயர் சொல்லும் பிள்ளைகளில் நானும் ஒருவன் : சரவணனுக்கு கமல் புகழ் அஞ்சலி | இந்த வார ஓடிடி ரிலீஸ்: சிறிய படங்கள் தான்....ஆனா ஒவ்வொன்னும் செம'வொர்த்'..! | 'பாகுபலி தி எபிக்' புரமோஷனுக்காக ஜப்பான் சென்ற பிரபாஸ்! | மம்முட்டியின் களம்காவல் படத்தில் 22 கதாநாயகிகள் | ஏர் இந்தியா விமான சேவை மீது சிதார் இசைக் கலைஞர் ரவிசங்கரின் மகள் குற்றச்சாட்டு | துல்கர் சல்மானுக்கு தான் விருது கிடைத்திருக்க வேண்டும் : நடிகர் விநாயகன் ஆதங்கம் |

கடந்த வருடம் கொரோனா முதல் அலை ஆரம்பித்ததில் இருந்து தற்போது வரை மலையாள திரையுலகில் வெளியான படங்களில் நடிகர் பிரித்விராஜ் படங்களே அதிகம். அது மட்டுமல்ல தற்போது அதிக படங்களிலும் நடித்து வருகிறார் பிரித்விராஜ். அந்தவகையில் அவர் நடித்துள்ள ஜனகணமன என்கிற படம் ரிலீசுக்கு தயாராகி விட்டது. தற்போது அவர் நடித்து வந்த விலாயுத் புத்தா என்கிற படத்தின் படப்பிடிப்பும் முடிந்து விட்டது. இந்தப்படம் இந்துகோபன் என்பவர் எழுதிய விலாயுத் புத்தா என்கிற நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் டபுள் மோகனன் என்கிற கதாபாத்திரத்தில் பிரித்விராஜ் நடித்துள்ளார். அதேசமயம் இந்த படத்தில் பாஸ்கரன் பிள்ளை என்கிற இன்னொரு முக்கிய கதாபாத்திரமும் இருக்கிறது. இந்த இருவருக்கும் இடையே ஏற்படும் ஈகோ மோதல் தான் இந்த படத்தின் கதை. பிரித்விராஜ் நடிப்பில் கடந்த இரண்டு வருடங்களில் வெளியான டிரைவிங் லைசென்ஸ் மற்றும் அய்யப்பனும் கோஷியும் ஆகிய இரண்டு படங்களும் இரண்டு நபர்களுக்கான ஈகோ மோதலை மையமாக வைத்து உருவாகி மிகப்பெரிய வெற்றியும் பெற்றன. அந்தவகையில் பிரித்விராஜூக்கு இந்த ஈகோ யுத்தம் சென்டிமென்ட் இந்த படத்திலும் கைகொடுக்கும் என நம்பலாம்.