இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 | டில்லியில் ஹேமமாலினியின் பாதங்களைத் தொட்டு வணங்கிய பாலகிருஷ்ணா | ‛ப்ரோ 2' ஸ்கிரிப்ட் ரெடி : பவன் கல்யாணின் கிரீன் சிக்னலுக்கு காத்திருக்கும் சமுத்திரக்கனி | சாய்பல்லவி நடித்த முதல் ஹிந்தி பாடலுக்கு வரவேற்பு |

மலையாள திரையுலகில் கடந்த வருடம் வெளியான நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை ஏற்படுத்திய தாக்கம் காரணமாக, திரை உலகில் உள்ள பல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. சிலர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்கள். இதில் மலையாள நடிகர் சங்கமான அம்மாவின் முக்கிய நிர்வாகிகளான சில நடிகர்களின் மீதும் இந்த குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டதால் அதற்கு தார்மீக பொறுப்பேற்று நடிகர் சங்க தலைவரான மோகன்லால் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவருடன் சேர்ந்து முக்கிய நிர்வாகிகள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்தனர். விரைவில் நடிகர் சங்கத்திற்கான புதிய தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக பலரும் தற்போது விண்ணப்பித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் ஆக்டிவாக செயல்பட்டு வந்த குணச்சித்திர நடிகை மாலா பார்வதி இந்த மறு தேர்தல் குறித்து கூறும்போது, “நடிகர் சங்கத்தில் இருந்த பல நிர்வாகிகள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் இருந்தன. நடிகரும், தயாரிப்பாளருமான விஜய் பாபு மீது அப்படி ஒரு குற்றச்சாட்டு எழுந்தபோது கூட அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் வில்லன் நடிகர் பாபுராஜ் மீது அப்படி ஒரு பாலியல் குற்றச்சாட்டு வந்தபோது அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய மறுத்தார். இத்தனைக்கும் மோகன்லால் அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கூட அவர் கேட்கவில்லை. அப்படி அவர் மறுத்ததால் தான் இனி இந்த தலைவர் பதவியில் இருப்பதற்கு அவசியம் இல்லை என்று கருதிய மோகன்லால் அதன்பிறகு ராஜினாமா செய்தார்” என்று ஒரு புதிய தகவலை கூறியுள்ளார் மாலா பார்வதி.