‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
கடந்த வருட இறுதியில் மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் குரூப் என்கிற திரைப்படம் வெளியானது. துல்கர் சல்மானை முதன்முதலாக கதாநாயகனாக அறிமுகப்படுத்திய ஸ்ரீநாத் ராஜேந்திரன் என்பவர்தான் இந்த படத்தை இயக்கியிருந்தார். கேரளாவில் எண்பதுகளில் வாழ்ந்த, இன்சூரன்ஸ் பணத்திற்காக ஆசைப்பட்டு தான் இறந்து போனதாக சித்தரிப்பதற்காக, வேறு ஒரு நபரை கொலை செய்த குற்றவாளியான சுகுமார குரூப் என்பவரின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்த படம் உருவாகி இருந்தது.
கொரோனா தாக்கத்தின் இரண்டாவது அலை ஓய்ந்த சமயத்தில் இந்த படம் தியேட்டரில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அப்போதே ஐம்பது கோடி வசூல் கிளப்பிலும் இணைந்தது இந்த படம். இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் அனைத்து மொழி ஓடிடி வெளியிட்டு உரிமைகள் விற்கப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து படத்தின் வசூல் மற்றும் ஓடிடி உரிமைத்தொகை எல்லாம் சேர்த்து குரூப் திரைப்படம் 118 கோடி மொத்தமாக வசூலித்துள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள துல்கர் சல்மான், இதற்கு காரணமாக இருந்த ரசிகர்களுக்கு தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.