பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

துல்கர் சல்மான் நடிப்பில் மலையாளத்தில் நவ., 12ல் குருப் என்கிற படம் தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாது ஹிந்தியிலும் வெளியானது. 'செகண்ட் ஷோ' படம் மூலம் துல்கரை சினிமாவில் அறிமுகப்படுத்திய ஸ்ரீநாத் ராஜேந்திரன் என்பவர் தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். உண்மை சம்பவத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப்படத்தில் சுகுமார குருப் என்கிற கிரிமினல் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் துல்கர் சல்மான்.
பான் இந்திய படமாக வெளியானதால் வெளியான ஐந்து நாட்களிலேயே 50 கோடி வசூலித்து ஆச்சர்யப்படுத்திய இந்தப்படம், இரண்டு வாரங்கள் கழிந்த நிலையில் தற்போது 75 கோடி வசூலித்துள்ளது. இதுவரை 35 ஆயிரம் காட்சிகள் திரையிடப்பட்டுள்ளன. துல்கரின் சினிமா பயணத்தில் அவரது முந்தைய படங்களுடன் ஒப்பிடுகையில் வசூலில் இது மிகப்பெரிய சாதனை என்றே சொல்லலாம்.




