ஜப்பானில் வெளியாகும் மலைக்கோட்டை வாலிபன் : ரிலீஸ் தேதி அறிவிப்பு | தேசிய விருதுக்கு படம் அனுப்புவதில் ஏற்பட்ட சிக்கல் : நீதிமன்றத்தை நாடிய பஹத் பாசில் படக்குழு | மம்முட்டிக்கு பிரித்விராஜ் சிபாரிசு, விநாயகனுக்கு மம்முட்டி சிபாரிசு : களம்காவல் சுவாரசியம் | சித்தார்த், ராஷி கண்ணா இணையயும் 'ரெளடி அண்ட் கோ' | பிளாஷ்பேக் : சொந்த வாழ்க்கை கதையில் நடித்த சுதா சந்திரன் | பிளாஷ்பேக் : பத்மினி சகோதரிகள் போல், நாட்டியத்தில் ஜொலித்த சாயி சகோதரிகள் | 'மை டியர் சிஸ்டர்' என்ன மாதிரியான கதை | வெப் தொடரில் விஜய்சேதுபதி மகன் | நானும் ஐஸ்வர்யா ராஜேஷ் அப்பாவும் நண்பர்கள் : நடிகர் அர்ஜூன் | லாட்டரி சீட்டு பின்னணியில் 80களின் நடக்கும் கதை ‛ராபின்ஹுட்' |

தமிழில் சசிகுமார் நடித்த பிரம்மன் மற்றும் மாயவன் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர் லாவண்யா திரிபாதி. தற்போது தெலுங்கு படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.. இன்னும் திருமணம் ஆகாத லாவண்யா, அவ்வப்போது திருமண கிசுகிசுக்களில் சிக்குவதை வாடிக்கையாக வைத்துள்ளார். அந்தவகையில் தெலுங்கு சினிமாவின் இளம் நடிகரும் நடிகர் சிரஞ்சீவியின் மெகா குடும்பத்தின் உறுப்பினர்களின் ஒருவருமான வருண் தேஜூடன், லாவண்யா திரிபாதி காதலில் விழுந்துள்ளார் என்றும், இருவரும் லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வருகிறார்கள் என்றும் கடந்த இரண்டு நாட்களாக சோசியல் மீடியாவில் ஒரு செய்தி பரவி வருகிறது.
இந்தநிலையில் இந்த செய்தியை கேள்விப்பட்ட லாவண்யா திரிபாதி, உடனடியாக இதற்கு மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “நான் இப்போது வரை சிங்கிளாக தான் இருக்கிறேன்.. எனக்கு ஏற்ற ஒரு நபரை இன்னும் நான் கண்டுபிடிக்கவில்லை.. வருண் தேஜூடன் இரண்டு படங்களில் இணைந்து நடித்ததாலும் அவருடன் ஒரு சில நிகழ்ச்சிகளில் இணைந்து பங்கேற்றதாலும் இதுபோன்ற கதைகளை பரப்பி விடுகிறார்கள்.. இதை யார் செய்கிறார்கள் என்பதும் கூட எனக்கு நன்றாகவே தெரியும். இதுபற்றி எல்லாம் நான் அலட்டிக் கொள்ளப் போவதில்லை” என்று கூறியுள்ளார் லாவண்யா திரிபாதி.




