அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
தமிழில் சசிகுமார் நடித்த பிரம்மன் மற்றும் மாயவன் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர் லாவண்யா திரிபாதி. தற்போது தெலுங்கு படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.. இன்னும் திருமணம் ஆகாத லாவண்யா, அவ்வப்போது திருமண கிசுகிசுக்களில் சிக்குவதை வாடிக்கையாக வைத்துள்ளார். அந்தவகையில் தெலுங்கு சினிமாவின் இளம் நடிகரும் நடிகர் சிரஞ்சீவியின் மெகா குடும்பத்தின் உறுப்பினர்களின் ஒருவருமான வருண் தேஜூடன், லாவண்யா திரிபாதி காதலில் விழுந்துள்ளார் என்றும், இருவரும் லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வருகிறார்கள் என்றும் கடந்த இரண்டு நாட்களாக சோசியல் மீடியாவில் ஒரு செய்தி பரவி வருகிறது.
இந்தநிலையில் இந்த செய்தியை கேள்விப்பட்ட லாவண்யா திரிபாதி, உடனடியாக இதற்கு மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “நான் இப்போது வரை சிங்கிளாக தான் இருக்கிறேன்.. எனக்கு ஏற்ற ஒரு நபரை இன்னும் நான் கண்டுபிடிக்கவில்லை.. வருண் தேஜூடன் இரண்டு படங்களில் இணைந்து நடித்ததாலும் அவருடன் ஒரு சில நிகழ்ச்சிகளில் இணைந்து பங்கேற்றதாலும் இதுபோன்ற கதைகளை பரப்பி விடுகிறார்கள்.. இதை யார் செய்கிறார்கள் என்பதும் கூட எனக்கு நன்றாகவே தெரியும். இதுபற்றி எல்லாம் நான் அலட்டிக் கொள்ளப் போவதில்லை” என்று கூறியுள்ளார் லாவண்யா திரிபாதி.