விவாகரத்து பற்றிய கேள்விக்கு விழா மேடையில் அதிரடி பதிலளித்த ஸ்வாதி | மைசூர் மியூசியத்தில் இருந்து பிரபாஸின் பாகுபலி சிலை விரைவில் அகற்றம் | ராஷ்மிகாவுடன் இப்போதும் தொடர்பில் இருக்கிறேன் : முன்னாள் காதலர் ஓபன் டாக் | மம்முட்டிக்கும், சந்திரமுகி-2க்கும் வழிவிட்டு ஒதுங்கிய குஞ்சாக்கோ கோபன் | 'லியோ' சர்ச்சைகளுக்கு இடையில் ஷாரூக்கானுக்கு வாழ்த்து சொன்ன விஜய் | 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தயாரிப்பாளர் : சவுந்தர்யா ரஜினிகாந்த் | 'ராசி' பட விழா ரத்துக்கு காரணம் இதுதானா ? | 'லியோ' விழா ரத்து பாலோ-அப் : உள் குத்தா, அரசியல் குத்தா ? | ஏ.ஆர்.ரஹ்மான் மீது போலீசில் புகார் | சிம்பு 48வது படத்தில் இணைந்த கே.ஜி.எப் பிரபலம் |
தெலுங்குத் திரையுலகத்தின் மெகா குடும்பம் என அழைக்கப்படும் சிரஞ்சீவி குடும்பத்தில் அவரது தம்பி நாகபாபுவின் மகன் வருண் தேஜ், நடிகை லாவண்யா திரிபாதி இருவருக்கும் நேற்று ஐதராபாத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. 'மிஸ்டர்' தெலுங்குப் படத்தில் இருவரும் இணைந்து நடிக்க ஆரம்பித்த 2016ம் ஆண்டிலிருந்து காதலித்து வந்ததாகத் தெரிகிறது.
கடந்த சில வாரங்களாகவே கிசுகிசுவாக பரவிய இவர்களது காதல், நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பாக வெளிவந்தது. உத்தரப்பிரதேசம் அயோத்யாவைச் சேர்ந்த லாவண்யா மும்பையில் படித்து வளர்ந்தவர். 'அந்தாள ராட்சசி' என்ற தெலுங்குப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தமிழில் 'பிரம்மன், மாயவன்' ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
அடுத்த ஆறு மாதங்களில் இவர்களது திருமணம் நடக்குமா அல்லது அடுத்த வருடத் துவக்கத்தில் நடக்குமா என்பது தெரியவில்லை. ஆனாலும், 'டெஸ்டினேஷன் வெட்டிங்' செய்ய காதல் ஜோடி முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. அதன்படி இத்தாலி நாட்டில் உள்ள ரிசார்ட் அல்லது ஹோட்டலில் திருமணத்தை நடத்த உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதற்கான இடங்களைத் தேடி வருகிறார்களாம். திருமணத்திற்குப் பிறகு லாவண்யா திரைப்படங்களில் நடிக்கக் கூடாது என வருண் குடும்பத்தினர் கண்டிப்புடன் கூறியதாகவும் டோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கிறார்கள். அதற்கு லாவண்யா சம்மதித்த பிறகுதான் திருமண நிச்சயத்தையும் நடத்தினார்கள் என்கிறார்கள்.