'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தெலுங்குத் திரையுலகத்தின் மெகா குடும்பம் என அழைக்கப்படும் சிரஞ்சீவி குடும்பத்தில் அவரது தம்பி நாகபாபுவின் மகன் வருண் தேஜ், நடிகை லாவண்யா திரிபாதி இருவருக்கும் நேற்று ஐதராபாத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. 'மிஸ்டர்' தெலுங்குப் படத்தில் இருவரும் இணைந்து நடிக்க ஆரம்பித்த 2016ம் ஆண்டிலிருந்து காதலித்து வந்ததாகத் தெரிகிறது.
கடந்த சில வாரங்களாகவே கிசுகிசுவாக பரவிய இவர்களது காதல், நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பாக வெளிவந்தது. உத்தரப்பிரதேசம் அயோத்யாவைச் சேர்ந்த லாவண்யா மும்பையில் படித்து வளர்ந்தவர். 'அந்தாள ராட்சசி' என்ற தெலுங்குப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தமிழில் 'பிரம்மன், மாயவன்' ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
அடுத்த ஆறு மாதங்களில் இவர்களது திருமணம் நடக்குமா அல்லது அடுத்த வருடத் துவக்கத்தில் நடக்குமா என்பது தெரியவில்லை. ஆனாலும், 'டெஸ்டினேஷன் வெட்டிங்' செய்ய காதல் ஜோடி முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. அதன்படி இத்தாலி நாட்டில் உள்ள ரிசார்ட் அல்லது ஹோட்டலில் திருமணத்தை நடத்த உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதற்கான இடங்களைத் தேடி வருகிறார்களாம். திருமணத்திற்குப் பிறகு லாவண்யா திரைப்படங்களில் நடிக்கக் கூடாது என வருண் குடும்பத்தினர் கண்டிப்புடன் கூறியதாகவும் டோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கிறார்கள். அதற்கு லாவண்யா சம்மதித்த பிறகுதான் திருமண நிச்சயத்தையும் நடத்தினார்கள் என்கிறார்கள்.