ஆக., 31க்கு தள்ளிப்போன ‛கோப்ரா' | பாஜக-வில் விரைவில் இணைய உள்ள நடிகை ஜெயசுதா | புஷ்பா 2 : பாடல் இசைக்கோர்ப்பு வேலைகள் ஆரம்பம் | நயன்தாரா திருமண நிகழ்வு, டாகுமெண்டரியாக வருகிறது… | அதிதி ஷங்கரை கவர்ந்த தமிழ் ஹீரோ | நியூயார்க்கில் நடைபெறும் சுதந்திர தின பேரணியில் அல்லு அர்ஜுன் | சந்திரமுகி 2 : முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு | ராஜு முருகன் படத்திற்காக கெட்டப்பை மாற்றும் கார்த்தி | கமல் - உதயநிதி இணையும் படத்தை இயக்கும் பிரசாந்த் முருகேசன் | கிளாமர் இமேஜ் மாறவேண்டும்: யாஷிகா விருப்பம் |
கேரளாவில் வளர்ந்து வந்த இளம் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் விஜய்பாபு படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு தருவதாக கூறி மலையாள புதுமுக நடிகையை பலாத்காரம் செய்ததாக நடிகை கொடுத்த புகாரின் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய விஜய்பாபு இப்போது திரும்பி வந்து போலீசாரின் விசாரணை வளையத்திற்குள் இருக்கிறார்.
விஜய்பாபுவிடம் நடத்திய விசாரணையில் அவரை வெளிநாட்டு தப்பி ஓட ஆலோசனை சொன்னது, அவரது கிரடிட் கார்டுக்கு பணம் அனுப்பியது பிரபல மலையாள நடிகர் ஷைஜூ குரூப் என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் நேற்று ஷைஜூ குரூப்பிடமும் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் விஜய்பாபுக்கு உதவி செய்தது உண்மை தான் என்றும், விஜய்பாபு நான் நிரபராதி எனது தொழில் எதிரிகள் அந்த நடிகையை பயன்படுத்தி பழிவாங்க நினைக்கிறார்கள் என்று கண்ணீர் சிந்தியதால் நட்பின் காரணமாக அவருக்கு இந்த உதவிகளை செய்தேன். நான் உதவி செய்தபோது அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை. என்று கூறியுள்ளார்.