கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் | வெப் தொடரான ராஜேஷ்குமார் நாவல் | கிறிஸ்துமஸ் பண்டிகையில் வெளியாகும் 'சர்வம் மாயா' | 'வாரணாசி' பட விழா செலவு 27 கோடி, ஸ்ருதிஹாசனுக்கு ஒரு கோடி | பிளாஷ்பேக்: ஒரிஜினலை வெல்ல முடியாத ரீமேக் |

கேரளாவில் வளர்ந்து வந்த இளம் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் விஜய்பாபு படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு தருவதாக கூறி மலையாள புதுமுக நடிகையை பலாத்காரம் செய்ததாக நடிகை கொடுத்த புகாரின் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய விஜய்பாபு இப்போது திரும்பி வந்து போலீசாரின் விசாரணை வளையத்திற்குள் இருக்கிறார்.
விஜய்பாபுவிடம் நடத்திய விசாரணையில் அவரை வெளிநாட்டு தப்பி ஓட ஆலோசனை சொன்னது, அவரது கிரடிட் கார்டுக்கு பணம் அனுப்பியது பிரபல மலையாள நடிகர் ஷைஜூ குரூப் என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் நேற்று ஷைஜூ குரூப்பிடமும் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் விஜய்பாபுக்கு உதவி செய்தது உண்மை தான் என்றும், விஜய்பாபு நான் நிரபராதி எனது தொழில் எதிரிகள் அந்த நடிகையை பயன்படுத்தி பழிவாங்க நினைக்கிறார்கள் என்று கண்ணீர் சிந்தியதால் நட்பின் காரணமாக அவருக்கு இந்த உதவிகளை செய்தேன். நான் உதவி செய்தபோது அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை. என்று கூறியுள்ளார்.




