பிரதீப் ரங்கநாதன் படத்தில் கதையின் நாயகியாக மமிதா பைஜூ | சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்பு | பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி | காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் |

மோகன்லால் நடிப்பில் பிரியதர்ஷன் இயக்கத்தில் மிக பிரமாண்டமான வரலாற்று படமாக உருவாகியுள்ள ‛மரைக்கார்; அரபிக்கடலிண்டே சிம்ஹம்' படம் ஓடிடியில் தான் ரிலீஸாக போகிறது என்பது உறுதியாகி விட்டது. அப்படி தியேட்டர்களில் மரைக்கார் படத்தை வெளியிடுவதாக இருந்தால், அதன் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் கேட்ட தியேட்டர்கள் எண்ணிக்கையும் எதிர்பார்த்த முன்பணமும் தர முடியாது என தியேட்டர் உரிமையாளர்கள் கூறிவிட்டனர்.
இதனால் தற்போது மரைக்கார் படத்தை ஓடிடியில் வெளியிடுவது என்றே உறுதியாக முடிவெடுத்து விட்டார் ஆண்டனி பெரும்பாவூர். அதுமட்டுமல்ல, இவரது தயாரிப்பில் மோகன்லால் நடித்துள்ள மற்ற நான்கு படங்களான ப்ரோ டாடி, அலோன், ட்வல்த் மேன் மற்றும் புலிமுருகன் இயக்குனர் டைரக்சனில் மோகன்லால் நடிக்க உள்ள புதிய படம் என அனைத்தையுமே ஓடிடியில் வெளியிடும் முடிவையும் அவர் எடுத்துவிட்டாராம்.
மரைக்கார் படம் சுமார் 83 கோடி செலவில் எடுக்கப்பட்டுள்ளதால் அது எந்த சேதாரமும் இல்லாமல் திரும்பி வரவேண்டும் என்பதற்காகவே ஓடிடி முடிவை எடுத்தார் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர். ஆனால் தியேட்டர் உரிமையாளர்கள் இந்த விஷயத்தில் நடந்த பேச்சு வார்த்தையின்போது தனது மனதை காயப்படுத்தி விட்டதால் தான், தனது மற்ற படங்களையும் ஓடிடியில் வெளியிடும் முடிவுக்கு வந்துவிட்டாராம்.
அதேசமயம் பி.உன்னிகிருஷ்ணன் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள ஆராட்டு படத்திற்கு தயாரிப்பாளர் வேறு ஒருவர் என்பதால் அந்தப்படம் மட்டும் தியேட்டர்களில் தான் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.




