இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா |

கடந்த ஆண்டு கொரோனா தொற்றின் முதல் அலை பரவும்போது பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் பிரதமர் பேரிடர் நிவாரண நிதிக்கு 25 கோடியை அள்ளிக் கொடுத்தார். இதுதவிர மும்பை மாநகராட்சி, மும்பை போலீசுக்கும் தலா 2 கோடி வழங்கினார்.
தற்போது 2வது அலை பரவும்போது முதல் ஆளாக ஒரு கோடி கொடுத்து ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார். இந்த தொகையை கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் நடத்தும் தொண்டு நிறுவனத்துக்கு அளித்துள்ளார். தேவைப்படுபவர்களுக்கு உணவு, மருத்துவ உதவி, ஆக்சிஜன் வழங்க இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று கவுதம் கம்பீர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அதோடு இந்த நிதியை வழங்கிய அக்ஷய் குமாருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
இதற்கு பதில் அளித்துள்ள அக்ஷய்குமார் “என்னால் உதவ முடிந்ததற்கு நன்றி. இந்த நெருக்கடியில் இருந்து விரைவில் மீள வேண்டும். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்று கூறியுள்ளார்.