2026லாவது அஜித் படம் வருமா | அண்ணா சாலை இரும்பு பாலத்திற்கு சிவாஜி பெயர் : ரசிகர்கள் வேண்டுகோள் | 2025ல் தமிழ் சினிமாவில் மறைந்த திரைப்பிரபலங்கள் | ஜனவரி 16ல் ஜூலிக்கு திருமணம்: பல வருட காதலரை மணக்கிறார் | திடீரென மேலாளரை நீக்கிய விஷால் | பிளாஷ்பேக்: பாடல்கள் இல்லாத 'வண்ணக் கனவுகள்' | பிளாஷ்பேக் : ஜெமினி கணேசனுக்கு வில்லனாக நடித்த சிவாஜி கணேசன் | ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் |

கடந்த ஆண்டு கொரோனா தொற்றின் முதல் அலை பரவும்போது பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் பிரதமர் பேரிடர் நிவாரண நிதிக்கு 25 கோடியை அள்ளிக் கொடுத்தார். இதுதவிர மும்பை மாநகராட்சி, மும்பை போலீசுக்கும் தலா 2 கோடி வழங்கினார்.
தற்போது 2வது அலை பரவும்போது முதல் ஆளாக ஒரு கோடி கொடுத்து ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார். இந்த தொகையை கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் நடத்தும் தொண்டு நிறுவனத்துக்கு அளித்துள்ளார். தேவைப்படுபவர்களுக்கு உணவு, மருத்துவ உதவி, ஆக்சிஜன் வழங்க இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று கவுதம் கம்பீர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அதோடு இந்த நிதியை வழங்கிய அக்ஷய் குமாருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
இதற்கு பதில் அளித்துள்ள அக்ஷய்குமார் “என்னால் உதவ முடிந்ததற்கு நன்றி. இந்த நெருக்கடியில் இருந்து விரைவில் மீள வேண்டும். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்று கூறியுள்ளார்.