துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை | அமெரிக்காவிலிருந்து புதிய கதையுடன் சென்னை திரும்பிய கமல் | 100 கோடியைக் கடந்த 'ஸ்கை போர்ஸ்' | 'என் இனிய பொன் நிலாவே' பாடல் : இளையராஜாவுக்கு உரிமையில்லை என நீதிமன்றம் தீர்ப்பு | 'பராசக்தி' தலைப்பு தொடரும் சிக்கல் ? | பொங்கல் படங்களில் தாக்குப் பிடிக்கும் 'மத கஜ ராஜா' |
கமல்ஹாசன் நடிப்பில் தமிழில் வெளிவந்த அவ்வை சண்முகி படத்தின் இந்தி ரீமேக்கான சாச்சி 420 படத்தில் கமல்ஹாசனின் மகளாக சிறு குழந்தையாக நடித்தவர் பாத்திமா சனா ஷேக். சமீபத்தில் ஆமீர் கானின் தங்கல் படத்தில் கீதா போகாத்தாக நடித்து பிரபலமானார்.
இந்நிலையில் சமீபத்தில் அவர் மர்ம நபர் ஒருவரால் தாக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: நான் ஜிம்மில் இருந்து திரும்பி வந்து கொண்டிருந்தபோது ஒரு ஆண் என்னையே பார்த்ததை கவனித்தேன். எதற்காக இப்படி பார்க்கிறாய் என்று கேட்டேன். அந்த நபரோ, அது என் இஷ்டம் என்றார்.
அறை வேணுமா என்று நான் கேட்டதற்கு அறையேன் என்றார். உடனே நான் அவரை அறைந்தேன், பதிலுக்கு அவர் என்னை குத்திவிட்டார். இதையடுத்து எனக்கு மயக்கம் வந்துவிட்டது. மயக்கம் தெளிந்த உடன் என் அப்பாவை அழைத்து நடந்ததை கூறினேன். அவர் மூன்று நபர்களை அழைத்துக் கொண்டு வந்தார். என்னை தாக்கியவர் ஓடத் துவங்கினார். அப்பாவும் நண்பர்களும் அவரை துரத்தினார்கள். ஆனால் அந்த ஆள் தப்பி விட்டான். தொடர்ந்து நம் நாட்டில் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே இருக்கிறது. என்றார்.