லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கைதி -2' படத்தில் நடிக்கவில்லை! -அனுஷ்கா மறுப்பு | திரில்லர் கதையை படமாக்கும் பிரேம்குமார்! பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார்!! | கமலின் 237வது படம் டிராப் ஆகிவிட்டதா? | சண்முக பாண்டியன் நடித்துள்ள ‛படை தலைவன்' படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சுதா கொங்கரா வெளியிட்ட வீடியோ! | எம்.பி.,யான கமல்ஹாசன்; சினிமா வளர்ச்சிக்காக குரல் கொடுப்பாரா? | நல்ல கதைக்காக காத்திருக்கும் ஜோதிகா | அடுத்த படத்துல ஹீரோயின் உண்டா? சண்முக பாண்டியன் பதில் | ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழா நடக்குமா? | விஜய் மில்டன் இயக்கத்தில் இரண்டாம் முறையாக இணைந்த அம்மு அபிராமி! |
ஜெயலலிதாவின் பயோபிக் படமான தலைவி படத்தில் அவரது கதாபாத்திரத்தில் நடிப்பதன் மூலம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவிற்கு வந்துள்ளவர் ஹிந்தி நடிகை கங்கனா ரணவத்.
பாலிவுட்டில் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கும் கங்கனா திரையுலகத்திற்கு வந்து இன்றுடன் 15 வருடங்கள் ஆகிறது. தன்னுடைய திரையுலகப் பயணத்தை ஷாரூக்கானுடன் ஒப்பிட்டு அவர் இன்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
“15 வருடங்களுக்கு முன்பு, இன்று தான் கேங்ஸ்டர் படம் வெளியானது. ஷாரூக்கான் ஜி மற்றும் நான் ஆகிய இருவருடைய கதைகள் தான் மிகப் பெரும் வெற்றிக் கதைகள். ஆனால், ஷாரூக்கான டில்லியிலிருந்து வந்தவர், கான்வென்ட்டில் படித்தவர், அவருடைய பெற்றோர் சினிமாவில் இருந்தனர்.
எனக்கு ஒரு வார்த்தை கூட ஆங்கிலம் தெரியாது, படிப்பு கிடையாது, ஹிமாச்சல் பிரதேசத்தின் ஒரு தொலைதூர கிராமத்திலிருந்து வந்தவள். என் வாழ்வை பரிதாபமாக்கிய, என்னுடைய அப்பா, தாத்தா ஆகியோரிடம் சண்டையிட்டு ஒவ்வொரு அடியாக போராடித்தான் வந்தேன். 15 ஆண்டுகளுக்குப் பிறகு, இவ்வளவு வெற்றிக்குப் பின்னும், வாழ்வதற்கு ஒவ்வொரு நாளும் போராடித்தான் வருகிறேன், ஆனால் முற்றிலும் மதிப்பானவை அவை. ஒவ்வொருவருக்கும் நன்றி,” என தன்னுடைய 15 வருட திரையுலக அனுபவம் குறித்து குறிப்பிட்டுள்ளார்.