பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
ரயிலில் பயணித்தபோது, தன் பையை எலி கடித்ததாக, ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவிடம், பிரபல மராத்தி நடிகை நிவேதிதா சராப், புகார் அளித்தார். புகார் மீது, ரயில்வே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து அசத்திஉள்ளனர்.
டுவிட்டரில் புகார் : பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்தியில் ஆளும் பா.ஜ., அரசின் அமைச்சர்கள், டுவிட்டர் உள்ளிட்ட சமூகதளங்கள் மூலம் மக்களுடன் நேரடியாக தொடர்பு கொள்கின்றனர். பொதுமக்களும், அமைச்சர்களுக்கு புகார்கள், குறைகள், பாராட்டுகளை அனுப்பி வருகின்றனர். பிரபல மராத்தி நடிகை நிவேதிதா சராப், 51, சமீபத்தில், மஹாராஷ்டிரா மாநிலம் லாட்டூரில் இருந்து மும்பைக்கு ரயிலில், முதல் வகுப்பில் பயணம் செய்தார். அப்போது, அவர் வைத்திருந்த பையை, எலி, கடித்து குதறி விட்டது. இதையடுத்து,பையை தலைக்கு வைத்து துாங்கினேன்; எலி சத்தம் கேட்டு விழித்து பார்த்தபோது, என் பையை எலி குதறி வைத்துள்ளது என, ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவுக்கு, புகாரை, டுவிட்டரில் அனுப்பி வைத்தார் நிவேதிதா. அடுத்த சில மணி நேரங்களிலேயே, அவருக்கு, ரயில்வே அதிகாரிகள், டுவிட்டரில் பதில் அனுப்பினர். அமைச்சருக்கு, நீங்கள் அனுப்பிய செய்தியை புகாராக பதிவு செய்துள்ளோம்; இனி, இதுபோல் நடக்காமல் இருக்க, உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என, அதில் கூறப்பட்டுள்ளது.
நடவடிக்கை : ரயிலில் பயணம் செய்பவர்கள் மீதம் வைக்கும் சாப்பாடு, உணவுப் பொருட்களே, எலி தொல்லைக்கு முக்கிய காரணம். எலிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இனி, அந்தப் பணி தீவிரப்படுத்தப்படும் என, மற்றொரு அதிகாரி, நிவேதிதாவுக்கு, டுவிட்டரில் செய்தி அனுப்பியுள்ளார்.