2025ன் 6 மாதங்களில் 122 படங்கள் ரிலீஸ் | விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் | இன்று முதல் ‛இட்லி கடை' டப்பிங் பணி துவங்குகிறது |
பாலிவுட் ஆக்ஷன் ஹீரோ அக்ஷய் குமார் அடுத்து நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினியோட எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான '2.ஓ' திரைப்படத்தில் வில்லனாக நடிப்பது நாம் எல்லோரும் அறிந்ததது தான். சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், ரஜினி சாரோட எந்திரன் இரண்டாம் பாகத்தில் வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டது ஏன் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அக்ஷய் குமார், “ரஜினி சாரோட அடி வாங்குறதும் பெருமை தான்” என்று கூறினார்.
மேலும், “ரஜினி சார் மிகச் சிறந்த நடிகர் மட்டும் அல்ல, மிக சிறந்த மனிதர், நான் சிறு வயது முதலே ரஜினியின் தீவிர ரசிகன். இந்த படம் என்னை வேறு ஒரு உலகத்தை சந்திக்க வைத்துள்ளது. பிரமாண்ட கிராபிக்ஸ், செட்டுகளுடன் வேலை செய்யப்போகிறேன் என்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி” என்று அவர் கூறினார்.
அக்ஷய் குமாரின் நடிப்பில் ஜனவரி 22ம் தேதி ஏர்லிஃப்ட் திரைப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.