ஒல்லியானவள் என கிண்டல் அடிப்பவர்களுக்கு சமந்தா சவால் | அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி படத்தைத் தயாரிக்கப் போவது யார் ? | பாரா ஸ்விம்மிங் வீரரை படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்து பாராட்டிய ரஜினிகாந்த் | சுரேஷ்கோபி படத்துக்காக ஒரு ஊரே ஒரு வாரத்திற்கு திருவிழா கோலத்துக்கு மாறியது | தக் லைப் நடிகருக்கு பதிலடி கொடுத்து வெளியிட்ட பதிவை நீக்கிய இயக்குனர் | இந்திய திரைப்படத்திற்கான அங்கீகாரம் : கமல் | கல்கி 2898 ஏடி ஓராண்டு நிறைவு : அமிதாப்பச்சன் வெளியிட்ட பதிவு | சொர்க்கத்தில் இன்னொரு நாள் : சுற்றலா கொண்டாட்டத்தில் சூர்யா, ஜோதிகா | டூரிஸ்ட் பேமிலி படத்தின் மொத்த வசூல் வெளியானது | சமந்தா, கீர்த்தி சுரேஷ் திடீர் சந்திப்பு |
பெங்களூருவைச் சேர்ந்த நிரஞ்சன் முகுந்தன் என்பவர் பாரா ஸ்விம்மிங்கில் பல சாகசங்களை செய்து கிட்டத்தட்ட நூறு பதக்கங்கள் வரை பெற்றுள்ளார். இவர் சில மாதங்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்தை சந்திப்பது தான் தனது வாழ்நாள் லட்சியம் என குறிப்பிட்டு ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோ எப்படியோ ரஜினியின் கவனத்திற்கு செல்லவே அதை தொடர்ந்து நிரஞ்சன் முகுந்தனுக்கு தன்னை வந்து சந்திக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார் ரஜினிகாந்த். இந்த சந்திப்பு சமீபத்தில் மைசூரில் நடைபெற்ற ஜெயிலர் 2 படப்பிடிப்பு தளத்தில் நடந்தது.
ரஜினியை சந்தித்த அந்த இனிய அனுபவம் குறித்து நிரஞ்சன் முகுந்தன் கூறும்போது, “ரஜினி சார் நான் சென்னையை சேர்ந்தவன் என நினைத்து தற்போது மைசூர் படப்பிடிப்பில் இருக்கிறேன் என்னை வந்து சந்திக்க முடியுமா என்று தகவல் அனுப்பி இருந்தார். அதன்பிறகு தான் நான் பெங்களூரை சேர்ந்தவன் என்று சொன்னதும் அப்படியானால் உடனடியாக வாருங்கள் என்று கூறினார். அதைத்தொடர்ந்து ஜெயிலர் 2 படப்பிடிப்பு தளத்திற்கு நேரில் சென்று சந்தித்தேன். அவரை சந்தித்த அந்த தருணத்தை இப்போது கூட என்னால் நம்ப முடியவில்லை.
அவரை சந்திக்கும்போதே என் கண்களில் கண்ணீர் வந்து விட்டது. கிட்டத்தட்ட அரை மணி நேரம் அமர்ந்து, என்னுடைய பயணங்கள் குறித்து பொறுமையாக நிறைய விசாரித்து கேட்டுக் கொண்டார். கடவுளின் குழந்தை என்று என்னை அழைத்ததுடன் எதிர்காலத்தில் இன்னும் சிறக்க தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார். நான் நூறாவது பதக்கம் வாங்கும் போது அணிந்திருந்த தொப்பியை எனது கிப்டாக ரஜினி சாருக்கு அளித்தேன்” என்று கூறியுள்ளார்.