பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
ரூ.500 கோடி ரூ.600 கோடி என்று பாலிவுட் படங்கள் மட்டுமே வசூலில் சாதனை படைத்து வந்தநிலையில், தென்னிந்திய படம் ஒன்றும் ரூ.600 கோடி வசூலித்தது பாலிவுட்டை மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. அந்தப்படம், சமீபத்தில் ராஜமெளலி இயக்கத்தில், பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான பாகுபலி படம் தான். உலகம் முழுக்க சுமார் 4000 தியேட்டர்களில் வெளியான பாகுபலி படம் 50 நாட்களை கடந்து தற்போதும் சிறப்பாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இப்படம் சுமார் ரூ.600 வசூலித்து சாதனை படைத்திருக்கிறது. அதிலும் குறிப்பாக இந்தியில் மட்டும் சுமார் ரூ.120 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. டப்பிங் படம் ஒன்று இந்தளவு வசூல் பெறுவது இதுவே முதன்முறையாகும்.