'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு | பிளாஷ்பேக்: நடிகையின் பிரச்னையை பேசிய முதல் படம் | தமிழில் 4 ஆண்டுக்கு பின் நாயகியாக நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன் | எனக்கு பாராட்டு விழா வேணாம்: தயாரிப்பாளர் தாணு | வீட்டை வைத்து கடன் வாங்கி படம் தயாரித்ததுஏன்? ஆண்ட்ரியா | 'வாழு, வாழ விடுங்கள்': கிண்டல், கேலிகளுக்கு கீர்த்தி சுரேஷ் பதில் | அஜித் அடுத்த பட அறிவிப்பு - தொடரும் தாமதம் |

தெலுங்கு சினிமாவின் பிரபல ஒளிப்பதிவாளர் கே.கே செந்தில்குமார். மகதீரா, ஈகா(நான்ஈ), பாகுபலி, ஆர்ஆர்ஆர் போன்ற பல வெற்றி படங்களுக்கு இவர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராஜமவுலியின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் இவர் என்று சொல்லலாம். செந்தில்குமாரின் மனைவி ரூஹி. ஆரோக்கியம் மற்றும் பிட்னஸ் துறையில் ஆர்வம் கொண்டவர், யோகா பயிற்சியாளரும் கூட. பல தெலுங்கு பிரபலங்களுக்கு இவர் யோகா கற்று கொடுத்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த ரூஹி, செகந்திராபாத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவரது உடல் உறுப்புகள் செயல் இழந்த நிலையில் நேற்று மரணம் அடைந்தார். ரூஹி மறைவுக்கு பல்வேறு தெலுங்கு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ரூஹியின் இறுதிச்சடங்குகள் இன்று நடைபெற்றன.




